Skip to main content

சூடு பிடித்த மனுக்கள் படலம்...திணறிய அதிகாரிகள்!

Published on 28/05/2019 | Edited on 28/05/2019

இந்தியா முழுவதும் மே 26 ஆம் தேதி இரவோடு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டது என இந்திய தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் 27 ஆம் தேதி முதல் வழக்கமான அரசுப்பணிகளை மக்கள் பிரிதிநிதிகள் தொடங்கின. இந்த அறிவிப்பு மே 26 ஆம் தேதி மாலை மக்கள் மத்தியில் மீடியாக்கள் கொண்டும் போய் சேர்த்தன் விளைவு, மே 27 ஆம் தேதி திங்கட்கிழமை மனுநீதி நாள் முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் தங்களது குறைகளைக் கூறி மனுக்களை தர திரண்டு வந்திருந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் மனுநீதி நாள் முகாமிற்கு 520 மனுக்கள் வந்தியிருந்தது என்பது குறிப்பிடதக்கது. அதில் தொழில் செய்ய கடனுதவி வேண்டும், முதியோர், விதவை உதவித்தொகை வேண்டும், ஊனமுற்றோர் உதவித்தொகை வேண்டும் என்கிற மனுக்களே அதிகம் இருந்தன.

 

 

TIRUVANNAMALAI COLLECTOR

 

 

கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் பொதுமக்களிடம் கோரிக்கை மனு வாங்குவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக உதவி வேண்டும் என மனு தந்த சிலருக்கு தற்போது நலத்திட்ட உதவிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார். அதன்படி மாற்று திறனாளிகள் 7 பேருக்கு, ரூபாய் 34,000 மதிப்பில் மூன்று சக்கர நாற்காலிகள், சிறப்பு நாற்காலிகள் போன்றவை வழங்கப்பட்டன.

 

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வந்த மனுக்களை விட இது குறைவு என்றாலும், தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட மறுநாள் நடைபெற்ற கூட்டத்திற்கே இவ்வளவு பேர் வருவார்கள் என அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை. இதனால் மனுக்களை பதிவு செய்யும் இடத்தில் அதிகாரிகள் திணறிவிட்டார்கள். அதே நேரத்தில் வேலூர் மாவட்டத்தில் குறைந்த அளவில் மக்கள் வந்து மனுக்களை தந்திருந்தனர். மாவட்ட நிர்வாகம் 472 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டதாக தெரிவித்துள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.