Skip to main content

கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு; அதிரடியாகச் செயல்பட்ட இந்து சமய அறநிலையத்துறை 

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

tiruvannamalai district muthumariamman temple incident 

 

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சில சமுகத்தினர் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஊர் பகுதியில் கோவில் அமைந்துள்ளதால் சுமார் 80 வருட காலமாக பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை  தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வந்தனர்.  கோவிலின் வெளியில் இருந்தே சுவாமி தரிசனம் செய்ய வைத்துள்ளனர்.

 

இந்நிலையில் முத்து மாரியம்மன் கோவில் கருவறையில் உள்ள சுவாமியை உள்ளே சென்று அனுமதிக்க வேண்டும் என பட்டியலின மக்கள் சார்பிலான சில அமைப்புகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்தக் கோரிக்கை மனுவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு பட்டியலின மக்கள் அம்மனை வழிபடலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் ஜனவரி 30 ஆம் தேதி கோவிலுக்குள் சென்று பட்டியலின மக்கள் சுவாமி தரிசனம் செய்யும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. இதனால் அக்கிராமத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

 

இந்நிகழ்வில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வெளியூர் நபர்களை அந்த ஊருக்குள் விடமாட்டோம் என ஊருக்கு வெளியே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் அந்த கிராமம் வழியாக மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் நெருக்கடியை சந்தித்தனர். எங்கள் பகுதியில் உள்ள கோவிலுக்குள் பட்டியலின மக்களை விட மாட்டோம், அவர்கள் பகுதியில் உள்ள கோவிலுக்கு நாங்கள் போகிறோம்மா? எங்கள் பகுதியில் உள்ள கோவிலுக்குள் அவர்கள் ஏன் வர வேண்டும் என கோவில் முன் திரண்ட அந்த கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கேள்வி எழுப்பினர். இதனால் பதற்றம் அதிகமானது. இந்த விவகாரத்தால் அந்த கிராமத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியது. போலீசார் அவர்களை எச்சரித்து கலைந்து போகச் சொல்லி அறிவுறுத்தினர்.

 

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ், எஸ்.பி கார்த்திகேயன், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் நுழைந்து சுவாமியை வணங்குவதை நேரில் கண்டார். ஆயிரத்துக்கும் அதிகமான பட்டியலின மக்கள் ஊர்வலமாக கோவிலுக்குள் சென்றனர். நூற்றுக்கணக்கானவர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சுவாமியை வணங்கினர். கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்ததை சட்டரீதியாக தகர்த்து கோவிலுக்குள் செல்லும் உரிமையை பெற்ற பட்டியலின சமூக மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.