Advertisment

அண்ணாமலையாரை தரிசிக்க அடையாள அட்டை கட்டாயம்... ஸ்ரீரங்கத்தில் சனிக்கிழமை தரிசனத்திற்கு கட்டுப்பாடு!

tiruvannamalai district, annamalaiyar temple peoples

திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயிலில் தரிசனம் செய்ய இன்று (19/09/2020) முதல் அடையாள அட்டை அவசியம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணம் கொண்டு வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதேபோல் அடையாள அட்டை கொண்டு வராதவர்கள் கண்டிப்பாக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசிக்கலாம் என்றும், சனிக்கிழமைகளில் 2 மணி நேரத்திற்கு 600 பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர் எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை அடையாள அட்டையுடன் காண்பித்து குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்யலாம் என கூறியுள்ளது.

Advertisment

annamalaiyar temple sri rangam tiruvanamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe