Skip to main content

அம்மா மேல மண்ணெண்ணய் ஊற்றி அப்பா தான் தீ வைத்தார்- இராணுவ வீரர் மகளின் புகார்!

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

திருவண்ணாமலை மாவட்டம், போளுர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் 30 வயதான நாகேந்திரன். இவருக்கு கடந்த 2012- ஆம் ஆண்டு போளுர் அடுத்த மங்களாபுரம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மூன்றாவது மகள் ரேணுகாவை திருமணம் செய்து கொண்டார். நாகேந்திரன், இராணுவத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு குஜராத் மாநிலத்தில் ராணுவ குடியிருப்பிலேயே வீடு ஒதுக்கப்பட்டுயிருந்தது. இதனால் திருமணம் ஆனதும் தனது மனைவியுடன் குஜராத் மாநிலத்திற்கு சென்று குடியேறினார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
 

இந்நிலையில் கடந்த 27- ஆம் தேதி வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்து ரேணுகா உயிருக்கு போராடுவதாக ஏழுமலை குடும்பத்தாருக்கு, குடியிருப்பு வளாகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியான ஏழுமலை குடும்பத்தினர் உடனடியாக புறப்பட்டு குஜராத் சென்றுள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு போய் பார்த்தபோது, சிகிச்சை பலனின்றி ரேணுகா இறந்துவிட்டதாக மருத்துவர்கள்  கூறியுள்ளனர்.

TIRUVANNAMALAI ARMY GUJARAT INCIDENT


மண்ணெண்ணய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டாள் ரேணுகா என கணவர் நாகேந்திரன் ரேணுகாவின் பெற்றோரிடம் கூறியுள்ளார். செய்தியை கேட்டு ரேணுகாவின் பெற்றோர் கதறி அழுதனர். பின்பு தனது மகளின் உடலை அங்கேயே அடக்கம் செய்துவிட்டு, தனது பேத்திகளை அழைத்துக்கொண்டு ஊருக்கு வந்துள்ளார்கள்.


ஊருக்கு வந்த பின், தனது தாத்தா, பாட்டியிடம், அம்மாவை அப்பா தான் அடிச்சி மண்ணெண்ணய் ஊற்றி தீ வைத்து எரிச்சார் என அழுதுக்கொண்டே சொல்லியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியாகி தனது பேத்தி யோகஸ்ரீயுடன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை சந்தித்து புகார் மனு அளித்தார். அதில் மேற்கண்டதை கூறி, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியே இப்படி கொலை செய்துவிட்டு, அதனை தற்கொலை என பொய் சொல்கிறார் என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து கலெக்டர் கந்தசாமி, அதனை காவல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைத்தார். புகாரை பெற்றுக்கொண்ட அவர்கள், விசாரணை நடத்துவதாக கூறியுள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.