தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்தார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத். மேலும் திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலையும் அணிவித்து தீபாராதனை மற்றும் கற்பூரம் காண்பித்து பூஜைசெய்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
ஏற்கனவே திருவள்ளுவருக்கு பாஜக தரப்பில் மத சின்னங்கள் அணிவித்து புகைப்படம் வெளியானதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதை தொடர்ந்து இதே திருவள்ளுவர் சிலை நேற்று முன்தினம் (04/11/2019) அவமரியாதை செய்யப்பட்டது. அவமரியாதை செய்த மர்ம நபர்களை பிடிக்க டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைத்து தமிழக காவல்துறை டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.