Skip to main content

பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டாம் வகுப்பு மாணவி... நீதிமன்றத்தை நாடி...

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

திருவள்ளூவர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த வழக்கறிஞர் பாஸ்கரன் என்பவரின் மகள் அதிகைமுத்தரசி. அதே பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அப்பள்ளியின் கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து இருந்ததால் மாணவி அதிகைமுத்தரசி மாவட்ட கல்வி அலுவலரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளித்தார். அதில் தான் படிக்கும் பள்ளி கட்டிடம் மிகவும் மோசமானதாக பழுதடைந்துள்ளதால் அக்கட்டிடத்தை பழுது பார்த்து சீர் படுத்த வேண்டும் அல்லது புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றும், அப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அதை மீட்டு பள்ளிக்கு விளையாட்டுத்திடல் ஏற்படுத்தி தரவேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் அந்த மாணவி பள்ளியில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டார். எனவே அந்த மாணவி நீதிமன்றத்தை நாடினார்.

 

Tiruvalluvar Second-class student went to court

 

 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருவள்ளுர் மாவட்ட நீதிபதியை நேரடியாக பள்ளிக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்குமாறு உத்திரவிட்டது. இதையடுத்து விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்ச் 2ஆம் தேதி இன்று வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அதில் நீதிபதிகள் சுந்தரேசன், கிருஷ்ணராமமூர்த்தி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், புகார் மனுவில் மனுதாரர் அதிகைமுத்தரசி குறிப்பிட்டிருந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்திருந்ததை சீர்படுத்த வேண்டும் மற்றும் பள்ளி வளாகத்தின் அருகே இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பள்ளி விளையாட்டு திடலாக மாற்ற வேண்டும். இதை ஒரு ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று உத்திரவிட்டனர். மேலும் இதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில் மனுதாரர் இதே மனுவில் வழக்கை தொடரலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.