Skip to main content

‘காவல்துறை உங்கள் நண்பன்’ - எடுத்துக்காட்டாக விளங்கும் காவல் ஆய்வாளர்

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

Tiruttani police inspector is friendly with the public

 

காவல்துறை என்றாலே பொதுமக்களுக்கு ஒருவிதமான  அச்சம்  இன்றளவும் இருந்து வருகிறது. இன்னும் சிலர் புகார் கொடுப்பதற்கே அச்சப்படும் நிலையிலும் இருந்து வருகின்றனர். ஆனால் இதற்கு எல்லாவற்றிற்கும் மாறாக,  திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் ஏழுமலை திகழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் நபர்களிடம் ஆய்வாளர் ஏழுமலையின் அணுகுமுறை காவல்துறையின் உங்கள் நண்பன் என்பதைப் பிரதிபலிப்பதாகத் தெரிவிக்கின்றனர். 

 

Tiruttani police inspector is friendly with the public

 

கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு 70 வயது மதிக்கத்தக்க ஒரு வயதான  மூதாட்டி ஒருவர் திருத்தணி காவல்நிலையத்தில் ஆதரவின்றி தவிக்கும் என்னை பலர் தாக்க வருவதாகப் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட ஆய்வாளர் ஏழுமலை, இனி நீங்கள் யாரும் இல்லாத ஆதரவற்ற மூதாட்டி அல்ல. நீங்கள் எனது தாய் போன்றவர். ஆகவே இன்று முதல் உங்கள் மகனாக நான் நின்று உங்களுக்கு மாதம்தோறும் பராமரிப்புத் தொகையைத் தருகிறேன் என்று கூறி அவருக்கு இன்றுவரை மாதம்தோறும் ரூ. 1000 அளித்து வருகிறார். 

 

இதனிடையே கஞ்சா, மது போன்ற போதைப் பொருட்கள் விற்கும் நபர்களை அழைத்து போதைப்பொருள் விற்பனையை நிறுத்தவும், அதற்கு மாற்று வாழ்வாதாரமாக தானே காய்கறி கடையை வைத்துத் தருவதாகவும் கூறி ஆய்வாளர் ஏழுமலை போதைப் பொருட்கள் ஒழிப்பு பிரச்சாரத்தையும் தொடங்கியிருக்கிறார்.  இப்படி ஆய்வாளர் ஏழுமலையின் செயல்பாடுகளுக்குத் திருத்தணி டிஎஸ்பி விக்னேஷின் ஒத்துழைப்பும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.