கார் எரிப்பு விவகாரம்... இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்...!

திருப்பூர் கோட்ட செயலாளர் மோகனசுந்தரத்தின் காரை தீ வைத்து கொளுத்தியதற்கு இந்து முன்னணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை காந்திபார்க் பகுதியில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 'தீ வைத்து கொளுத்திய அந்த சமூக விரோதிகளை கைது செய்' என முழக்கங்கள் எழுப்பினர். இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா, கோட்ட செயலாளர் சதீஷ், மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

tirupur hindu munnani worker issue

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேலும் வருகின்ற காதலர் தினத்தன்று காதல் என்ற பெயரில் கலாச்சார சீர்கேடுகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீர்கேடுகள் நடைபெறாமல் இருக்க காவல்துறை தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். காதலர் தினத்தை முன்னிட்டு 13-ம் தேதி இந்து முன்னணி கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தனர்.

hindu party tirupur
இதையும் படியுங்கள்
Subscribe