Skip to main content

தண்ணீர் இல்லாத 90 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிர் தப்பிய வாலிபர்!

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புலனேரி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் 33 வயதான சீனு. இவர் தனது ஊருக்கு அருகில் உள்ள பூரிமாணிக்கமிட்டம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

Tiruppattur incident - young man fell into the well

 



இந்த நிலையில் மார்ச் 11 ந்தேதி மாலை எரிக்கோடி சிகே ஆசிரமம் பகுதியைச் சேர்ந்த சகுந்தலா என்பவருக்கு நிலத்துக்கு அருகில் உள்ள 90 அடி கிணற்றில் சீனுவின் உறவினர்கள் வளர்த்த கோழி பறந்து சென்று விழுந்து உள்ளது. கிணற்றில் உள்ள கோழியை பிடித்து தரும்படி சீனுவை உறவினர்கள் கேட்டுள்ளனர். சீனுவும் தண்ணீர் இல்லாத அந்த 90 அடி கிணற்றுக்குள்  கயிறு கட்டி இறங்கியுள்ளார்.

பாதி தூரம் இறங்கியதும் திடீரென கயிறு அறுந்து, மேலேயிருந்து கிணற்றுக்குள்  சீனு விழுந்தார். கீழே விழுந்த அவர் கிணற்றில் கத்தி அழ உறவினர்கள் கதறி அழுதனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர்.  பின்னர் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்க, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சீனுவை கயிறு கட்டி மேலே தூக்கி வந்தனர்.

சீனுவுக்கு தலையில் லேசான காயமும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுயிருந்தது. உடனே 108 வாகனம் வரவைத்து அதன் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கால் இடறி கிணற்றில் விழுந்த கல்லூரி மாணவி மீட்பு

Published on 23/07/2023 | Edited on 23/07/2023

 

 Rescue of a college girl who tripped and fell into a well

 

திருச்சியில் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண்ணை மீட்புப்படையினர் போராடி மீட்டனர்.

 

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள பெருவளப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அந்த பகுதியிலிருந்து 50 அடி ஆழம் கொண்ட வற்றிய கிணற்றில் விழுந்தார். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் வயலுக்குச் செல்லும் பொழுது கிணற்றில் காலிடறி உள்ளே விழுந்துள்ளார். பெண்ணின் சத்தத்தைவிட்டு அக்கம்பக்கத்தினர் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கயிறு மூலம் கல்லூரி மாணவியை கட்டி மேலே கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

Next Story

கிணற்றில் விழுந்த பசு மாடு; சாதுரியமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

karur velliyanai neraset cow into well safety recover 

 

கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிய பசு மாடு ஒன்றை தீயணைப்பு மீட்புப் படையினர்  பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

 

கரூர் மாவட்டம், வெள்ளியனை அடுத்த தாளியாப்பட்டி கிராமத்தில் பெரியசாமி என்பவருக்குச் சொந்தமான பசு மாடு எதிர்பாராத விதமாக 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து விட்டதாகக் கரூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்திற்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

தகவலின் பேரில், கரூர் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர், கயிறு மூலம் பசு மாட்டைக் கட்டி அனைவரும் ஒன்று சேர்ந்து மேலே இழுத்து பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.