Skip to main content

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பலியான மனநலம் பாதித்த பெண்... தானாக முன்வந்து வழக்குப்பதிந்த மனித உரிமை ஆணையம்!

Published on 18/07/2020 | Edited on 18/07/2020


 

tiruppattur district, vaniyambadi incident state human rights commission

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே புருஷோத்தமன்குப்பம் அருந்ததியர் காலனி பகுதியில் கடந்த 10- ஆம் தேதி தொடர்மழை காரணமாக குடிசை வீடு இடிந்து விழுந்து அன்னைம்மாள் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார். 

 

கடந்த 2017- 2018 ஆம் ஆண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பிலான வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறி வங்கிக் கணக் கு பணப் பரிமாற்றத்தில் மோசடி செய்து, வீடு கட்டப்பட்டதாகக் கணக்கு காட்டியுள்ளனர்.  அதனால் வீடு கட்டமுடியாமல் குடிசை வீட்டில் வசித்து வந்ததால் தொடர்மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அவர் சம்பவ இடத்தில் பலியானார். 

 

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தை இறந்த நிலையில் தாயும் உயிரிழந்ததால் அவர்களுடைய 13 வயது சிறுவன் அந்தோணிராஜ் என்கிற ராகுல்காந்தி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக வெளியான பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

 

மாநில மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் துரை ஜெயச்சந்திரன், இச்சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நான்கு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இச்சம்பவம், இந்த விவகாரத்தை அமுக்க நினைத்த ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறையின் மாவட்ட அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களின் சிசிடிவி கேமராக்கள் உடைப்பு!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Close to Vaniyambadi, two ATM, centers CCTV cameras were broken

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதி பிரதான சாலையில் உள்ள இந்தியா ஒன் மற்றும் எச்.டி.எப்சி என அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களை, கொள்ளையர் ஒருவர் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவில் புகுந்து ஏடிஎம் மையங்களின் கதவுகளை உடைத்து திருட முயன்று தோல்வியடைந்துள்ளது. வெளியே வந்த பார்த்து சிசிடிவியில் தனது முகம் பதிவானதை அறிந்து கேமராவை உடைத்து சென்றுள்ளார்.

Close to Vaniyambadi, two ATM, centers CCTV cameras were broken

இதுகுறித்து வங்கியின் நிர்வாகத் தரப்பிலிருந்து புகார் ஏதும் எழாத நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதில் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் நபரின் முகம் தெளிவாகப் பதிவானதைத் தொடர்ந்து இவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மின்கம்பம் மீது கார் மோதி விபத்து; 6 கல்லூரி மாணவர்கள் படுகாயம்

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Accident involving a car hitting a power pole; 6 college students were injured

வாணியம்பாடியில் மின்கம்பம் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 கல்லூரி மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் பயின்று வரும் கல்லூரி மாணவர்கள் 6 பேர்  கல்லூரி முடிந்து காரில் ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில்  பயணம் செய்த ஆம்பூர் பாங்கிஷாப் பகுதியைச் சேர்ந்த நவ்மான், பெரியாங்குப்பம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த நியாமத்துல்லா, கிஷோர், முஜம்மில், வாசிப், புர்கான்  உள்ளிட்ட  மாணவர்கள்  படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மற்றும் ஆம்பூர் கிராமிய போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கல்லூரி மாணவர் நவ்மான் (19)உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் கல்லூரி முடிந்து காரில் வீடு திரும்பியபோது விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.