Skip to main content

சுற்றுலாத் தலத்தில் தூக்கிட்டு இருவர் தற்கொலை!

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

tirupattur jalagmbarai falls two passes away


திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இது இப்பகுதியின் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.


இந்நிலையில் நவம்பர் 4ஆம் தேதி காலை, நீர்வீழ்ச்சிக்குச் சென்ற அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்குள்ள மரம் ஒன்றில் ஒரு ஆண், ஒரு பெண் என இருவர் தூக்கிட்டு இறந்துள்ளனர். உடனடியாக இதுபற்றி குரிசலாப்பட்டு காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அங்குவந்த காவல்துறையினர் உடலை கீழே இறக்கி, அவர்கள் யார் என விசாரணை நடத்தினர். விசாரணையில் வாணியம்பாடி அடுத்த ஏரிவட்டம் கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவரின் 35 வயது மகன் சக்திவேல் என்பதும், அந்தப்பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த சென்றாயன் என்பவரின் மனைவி 33 வயதான ரீட்டா என்பதும் தெரியவந்தது.


சக்திவேலுக்கும், ரீட்டாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்த திருமணத்தை மீறிய உறவு விவகாரம் இரு குடும்பத்தாருக்கும் இடையே தெரியவந்துள்ளது. அதனால் இரு குடும்பத்துக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பிரிய மனம்மில்லாத இருவரும் நவம்பர் 3ஆம் தேதி இரவு இங்கு வந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

 

உடலை திருப்பத்தூர் அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த குரிசிலாப்பட்டு போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.டி. ரெய்டில் ரூ. 40 லட்சம் பறிமுதல்; திருப்பத்தூரில் பரபரப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
IT Raid Rs. 40 lakh forfeited; Busy in Tiruppathur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதே சமயம் திருப்பத்தூர் மாவட்டம் திருநாதர் முதலியார் என்ற பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் போட்டோ ஸ்டுடியோ, ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி. ரமேஷின் அக்காள் மருமகன் ஆவார். இத்தகைய சூழலில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து வருமான வரித்துறையினருக்கு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நவீன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது ரூ. 40 லட்சம் ரொக்கம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வருமான வரித்துறை சோத்னையின் மூலம்  ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மாற்றுத்திறனாளி சிறுவனை தனியார் பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநர்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
conductor refused to board the differently-abled son in the private bus

திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குப்தா. இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு 14 வயதில் மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இவரை இன்று இவருடைய அம்மா வெண்ணிலா திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் விசமங்கலத்தில் உள்ள வீட்டிற்குச் செல்வதற்காக திருவண்ணாமலை செல்லும் தனியார் பேருந்தில் மாற்றுத்திறனாளியான மகனை ஏற்றி சீட்டில் உட்கார வைத்துள்ளார். அப்போது மாற்றுத்திறனாளி மகனைத் தனியார் பேருந்தின் நடத்துநர் கீழே இறக்கி விட்டுள்ளார். 

ஆத்திரம் அடைந்த அவரின் தாயார் வெண்ணிலா மற்றொரு பேருந்தில் விசமங்கலம் பகுதிக்கு வந்து சாலையில் கல்லை வைத்து கையில் பெட்ரோல் கேனுடன் திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டார்.

conductor refused to board the differently-abled son in the private bus

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆய்வாளர் ரேகா மதி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.