Skip to main content

மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 3 மணி நேரத்தில் மீட்பு!

Published on 31/05/2020 | Edited on 01/06/2020

 

tirupattur district government hospital


திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காகச் சில தினங்களுக்கு முன்பு சேர்ந்துள்ளார். அவருக்கு மே 29ஆம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் உறவினர் ஒருவர் குழந்தையைப் பெற்றுள்ளார். அவரை பார்க்க வந்தேன் எனச்சொல்லி பாதுகாப்பான வார்டில் சுற்றி வந்துள்ளார்.
 


சம்மந்தப்பட்ட பெண்ணிடம் உரையாடிக்கொண்டு இருந்தவர், குழந்தையைப் பார்த்துவிட்டு தருகிறேன் எனச்சொல்லி வாங்கியதாகக் கூறப்படுகிறது. கண் இமைக்கும் நேரத்தில் அந்தப் பெண்மணி அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். குழந்தையின் தாயார் அழ, இதுப்பற்றி உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தரப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் நகர காவல்ஆய்வாளர் பேபி தலைமையில் ஒரு டீம் அமைத்து, மருத்துவமனை மற்றும் அந்தச் சாலையில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு பெண்மணி தூக்கிச் செல்வது தெரிந்து, அவரை தேடத்துவங்கியுள்ளார்கள், வாகன சோதனை நடத்தப்பட்டுள்ளது.
 


திருப்பத்தூர் நகரம் தேவங்கர் தெருவைச் சேர்ந்த நஹினா என்பவர் குழந்தையைக் கடத்திச்சென்று, அவரது வீட்டினுள் குழந்தையின் மீது துணியைப் போர்த்தி வைத்திருந்ததைப் போலிசார் கண்டுபிடித்துள்ளனர். குழந்தையை மீட்டு குழந்தையின் பெற்றோரிடம் எஸ்.பி. விஜயகுமார் ஒப்படைத்தார். குழந்தை கடத்தப்பட்ட 3 மணிநேரத்துக்குள் குழந்தையைக் கண்டுபிடித்த காவல்துறையினருக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுத் தெரிவித்துவருகின்றனர்.
 

குழந்தையைக் கடத்திய அந்தப் பெண்மணி, இதற்கு முன்பு இதேபோல் குழந்தை கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா? இவரது பின்னணி என்ன? மருத்துவமனையில் இருந்து குழந்தையைச் சுலபமாக வெளியே கொண்டு வந்தது எப்படி? போன்ற பல்வேறு கேள்விகள் உள்ளன. இதுபற்றி காவல்துறை தரப்பில் எந்தப் பதிலும் இல்லை. இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர் காவல்துறையினர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.