Skip to main content

5 ஆண்டுக்குப் பின் கைதான கொலைகாரர்கள்!

Published on 16/10/2020 | Edited on 16/10/2020

 

tirupattur case four people arrested after 5 years!


திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாச்சலம். இவர் அப்பகுதியின் சமூக ஆர்வலராக வலம் வந்தவர். மக்களுக்கு மனுக்கள் எழுதித் தருவது, அப்பகுதியில் நடக்கும் தவறுகளை அதிகாரிகளுக்குப் புகாராக அனுப்புவது, சாராயம் விற்பனையாளர்களைக் காவல்துறையினரிடம் சொல்வது, மக்களுக்கு எதிராகச் செயல்படும் காவல்துறையினரை எதிர்த்து போஸ்டர், நோட்டீஸ் அடிப்பது, போராடுவது என இருந்துவந்தார்.


இவர், கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி ஆம்பூர் அடுத்த மாபுதூர் பகுதியில் அடித்துக் கொலை செய்து வீசப்பட்டிருந்தார். இதுகுறித்து ஆம்பூர் தாலுக்கா போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். இந்த விசாரணை சரியாக நடக்காது என தணிகாச்சலத்தின் உறவினர்கள் புகார் கூறினர். குற்றவாளிகள் என அடையாளம் சொல்லப்படுபவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமுமில்லை என்பதால் வழக்கை கைவிடுகிறோம் என காவல்துறை, நீதிமன்றத்தில் கூறியது.


இதில் நீதிமன்றம் அதிருப்தியடைந்தது, ஒரே கோணத்தில் விசாரணை நடத்தினால் கொலை குற்றவாளியை எப்படிப் பிடிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பியது. மேலும்,இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி.யும் கிணற்றில் போட்ட கல்லாக இந்த வழக்கை வைத்திருந்தது.


இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட தணிகாச்சலத்தின் சகோதரர் சுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் விரைந்து விசாரணையை முடிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். அதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டியின் சென்னை பிரிவு டி.எஸ்.பி கண்ணன் தலைமையில் 8 சி.பி.சி.ஐ.டி போலீஸார், ஆம்பூர் சென்று ஆம்பூர் தாலுக்கா காவல்நிலையத்தில் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின் மாதனூர் அடுத்த பாலூரைச் சேர்ந்த லோகேஷ், கார்த்தி, ஜெகதீஷ், சாம்பசிவராவ் என நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

Ad


கொலை செய்யப்பட்டு முழுதாக 5 ஆண்டுகள் முடிந்தபின் கொலைகாரர்கள் 4 பேரை கைது செய்து சிறையில் சி.பி.சி.ஐ.டி அடைத்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆம்பூரில் மத்திய உளவுத்துறையால் இளைஞர் கைது! 

Published on 31/07/2022 | Edited on 31/07/2022

 

Youth Arrested by Central Intelligence Agency in Ampur!

 

தடைச் செயயப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், நீலிக்கொல்லி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அனாசலி என்ற கல்லூரி மாணவரிடம் மத்திய உளவுத்துறை மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சுமார் 15 மணி நேரம் விசாரணை செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு செல்போன்கள், ஒரு லேப்டாப் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, அவற்றையும் சோதனை செய்தனர். இதையடுத்து, தடைச் செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி மாணவர் அனாசலியை கைது செய்தனர். 

 

ஆம்பூரில் முக்கிய பிரமுகர் ஒருவரைக் கொலை செய்வதற்கும், வெடிக்குண்டு தாக்குதலுக்கும் திட்டம் தீட்டியதாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. கல்லூரி அனாசலி மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். 

 

Next Story

வீட்டு வாசலில் இளைஞர் கொலை..! தீவிர விசாரணையில் போலீஸ்..! 

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

Tirupattur district youth passes away

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியங்குப்பம் ரசாக்பேட்டை பகுதியில் வசிப்பவர் சிவகுமார். 28 வயதான இந்த இளைஞர், வீட்டிற்கு வெளியே ஆகஸ்ட் 12 ஆம் தேதி படுத்துக்கொண்டு இருந்துள்ளார். ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை அக்கம் பக்கத்து வீட்டு பெண்கள் வெள்ளிக்கிழமை வீட்டை சுத்தம் செய்ய வாசலுக்கு வந்தபோது, திண்ணையில் படுத்திருந்த சிவக்குமார் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துயிருப்பதை தெரிந்து அலறியுள்ளனர்.

 

இதுக்குறித்து போலிஸாருக்கு தகவல் சொல்லப்பட்டதும் ஆம்பூர் கிராமிய போலீஸார் நேரடியாக வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு விசாரணை நடத்தினர். இளைஞர் ஒருவர் வீட்டு வாசலில் வைத்து கொலை செய்யப்பட்ட தகவல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்திக்கு தெரியப்படுத்த அவர் நேரடியாக சம்பவயிடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். 

 

கொலை செய்தது யார்? முன்விரோதமா? பெண் தொடர்பா? குடும்ப பிரச்சனையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.