Skip to main content

உணவு டெலிவரி செய்யும் இளைஞர் எரித்து கொலை!

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

Tirunelveli youth passed away in viluppuram

 

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் விராட்டிகுப்பம் எனும் பகுதி உள்ளது. இப்பகுதியில் நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில், நேற்று காலை சாலையோரம் ஒரு இருசக்கர வாகனம் நீண்ட நேரம் நிற்பதைக் கண்டு அங்கிருந்தவர்கள் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின்படி, டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான போலீசார் அந்த இருசக்கர வாகனம் நின்ற இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

 

வாகனம் நின்ற இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத கருவேல மரங்கள் அடர்ந்த பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்தனர். 

 

அவர்கள் அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டதில், உடல் கிடந்த இடத்தின் அருகில் சிதைந்த செல்போன், ஒரு பர்ஸ் ஆகியவை கிடந்துள்ளன. அதில் ஆதார் உள்ளிட்ட சில அடையாளங்கள் இருந்துள்ளன. அதன் மூலம் எரிக்கப்பட்ட வாலிபர் திருநெல்வேலி மாவட்டம், சோலைசேரியை சேர்ந்த ஆபிரகாம் சாலமன் ராஜா என்பவரின் மகன் பெஞ்சமின் ஆபிரகாம்(28) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரது பெற்றோரை தொடர்பு கொண்டு போலீசார் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

 

அதன்பிறகு போலீஸார் நடத்திய விசாரணையில், பெஞ்சமின் கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னையில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்ததுள்ளார். அங்கிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போதுதான் விழுப்புரம் நெடுஞ்சாலை அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. 

 

அவரது சடலத்தை மீட்ட போலீசார், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டது எப்படி? அவருக்கு யாராவது விரோதிகள் இருக்கிறார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.