Skip to main content

நெல்லை: போலீஸ் ஸ்டேஷன் முன்பு 'வெடிகுண்டு' வீச்சு!

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

tirunelveli police station incident

 

நெல்லை மாநகரத்திற்குட்பட்ட தச்சநல்லூர் காவல் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும் பகுதி. அந்தக் காவல் நிலையத்திற்குட்பட்ட சத்திரம் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணபிரான். இவர், தனது முன்ஜாமீன் தொடர்பாக காலை 10.30 மணியளவில் தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்திட வந்திருக்கிறார். கண்ணபிரானுக்கும், அவருக்கு எதிரானவர்களுக்கும் முன்பகை இருந்திருக்கிறது. அதன் காரணமாக தனது கூட்டாளிகள் 5 பேர் பாதுகாப்புடன் காவல் நிலையம் வந்த கண்ணபிரான், அங்கே கையெழுத்திட்டுக் கொண்டிருந்த நேரத்தில், காவல் நிலையத்திற்கு வெளியே நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் காவல் நிலையம் பரபரப்பானது.

 

காவலர்கள் வெளியேவந்து தேடியபோது வெடிகுண்டு வீச்சாளர்கள் தப்பியிருந்தனர். அடுத்தடுத்து வீசப்பட்ட மூன்று வெடிகுண்டு வீச்சில் கண்ணபிரானின் ஆதரவாளர்கள் கிங்ஸ்டன் உள்பட இருவருக்குக் காயம் ஏற்பட்டது. வெடித்த நாட்டு வெடிகுண்டைச் சோதனையிட்டபோது, அது கோவில் திருவிழாவில் பயன்படுத்துகிற வகையைச் சேர்ந்தது என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தினர். 

 

tirunelveli police station incident

 

இது குறித்து நெல்லை மாநகர டி.சி.யான சரவணனிடம் பேசியதில், "குற்றவாளிகள் வந்த மூன்று பைக்குகளின் பதிவு எண்களும், சி.சி.டி.வி. ஃபுட்டேஜில் பதிவாகியிருக்கிறது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 'கண்ணபிரான் தன் எதிராளிகளால் எனக்கு அச்சுறுத்தல் உள்ளது' என்றிருக்கிறார். அடையாளம் தெரியாத 8 பேர் என்று ஃஎப்.ஐ.ஆர்.போடப்பட்டுள்ளது, விரைவில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம்" என்றார். 

 

காவல்நிலையம் முன்பு பட்டப்பகலில் வீசப்பட்ட வெடிகுண்டு வீச்சால் மாநகரம் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.