Skip to main content

மனைவி கண் முன்னே வாலிபர் படுகொலை... போலீசார் விசாரணை

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 

பாளையை அடுத்துள்ள சீவலப்பேரி சமீபமிருக்கும் பாலாமடை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (29). இவரது மனைவி பிச்சம்மாள். இந்த தம்பதிகளுக்கு பழனி என்ற மகன் உள்ளார். வாலிபரான முருகானந்தம் கிராமத்தில் விவசாய கூலி வேலையிலிருப்பவர். இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் தன் மகன் பழனியை முன்புறம் அமர வைத்தவாறு பாளையங்கோட்டைக்கு வந்திருக்கிறார் முருகானந்தம். காலை 11.30 மணியளவில் அவர்கள் மொபட்டில் சமாதானபுரத்தின் கண்ட்ரோல் ரூம் அருகேயுள்ள எருமைக்கிடா மைதானருகே வரும் சமயம் ஒரு திருப்பத்தில் முருகானந்தத்தின் மொபட் மெதுவாகத் திரும்பிய நேரத்தில் திடீரென்று எதிரே இரண்டு டூவீலர்களில் வந்த மர்மநபர்கள், முருகானந்தத்தின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளனர். அதில் முருகானந்தம் உட்பட மூவரும் நிலை குலைந்து சரிந்திருக்கின்றனர்.
 

வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் முருகானந்தத்தின் தலை மற்றும் கையில் வெட்டியுள்ளனர். அடுத்தடுத்து தலையில் வெட்டு விழுந்ததால் சம்பவ இடத்திலேயே முருகானந்தம் பிணமானார். தன் கண் முன்னே கணவர் வெட்டப்பட்டது கண்டு மனைவி கதறிய நேரத்தில், படுகொலைச் சம்பவத்தால் அக்கம்பக்கத்தினர் பதறிய ஒடியிருக்கின்றனர். முருகானந்தத்தை வெட்டிய போது அவரது மகன் பழனிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

 

tirunelveli palayamkottai



 

தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த பாளை இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் முருகானந்தத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி விட்டு விசாராணையை மேற்கொண்டுள்ளனர்.
 

பல் தொந்தரவு காரணமாக சிகிச்சைக்காக பல் மருத்துமனைக்கு வந்து கொண்டிருந்த போது தான் சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாராணையில் தெரிவித்திருக்கிறார் மனைவி பிச்சம்மாள்.
 

பலியான முருகானந்தத்தின் மீது நான்கு கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் இரண்டு கொலை வழக்குகள். வழக்கின் வாய்தாவிற்காகத் தவறாமல் ஆஜராகி வந்திருக்கிறார். இன்று வழக்கின் பொருட்டு நீதிமன்றம் சென்றுவிட்டு மனைவி, மகனுடன் மருத்துவமனைக்குச் செல்லும் போது தான் மர்ம நபர்களால் முருகானந்தம் படுகொலைக்குள்ளாகியிருக்கிறார்.
 

மேலும் கடந்த 2018 சீவலப்பேரில் நடந்த படுகொலையில் தொடர்பாகப் பழிக்குப் பழியாக நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது என்கிறார்கள் போலீஸ் விசாராணை அதிகாரிகள்.
 

ஜனரஞ்சகமான பாளையில் பட்டப்பகலில் நடந்த படுகொலைச் சம்பவத்தால் அதிர்ந்திருக்கிறது பாளை.




 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.