Skip to main content

மேலப்பாளையத்தில் கலெக்டர் மீட்டிங் - பொதுமக்களின் 10 கோரிக்கைகள்...

Published on 02/04/2020 | Edited on 07/04/2020

 

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மூலமாக அங்குள்ள பலருக்கும் பரவியிருக்கிறதா என்பதை உறுதி செய்யும் வகையிலும் மேலாப்பாளையத்திற்கு செல்லும் அத்தனை வழிகளும் மூடப்பட்டன. 
 

இந்த நிலையில் மேலப்பாளையத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் துறை அதிகாரிகள், மாநகராட்சி, சுகாதார துறை அதிகாரிக உடன், ஜமாத்துல் உலமா சபை தலைவர் பி. ஏ. காஜா மொய்னுதீன் அவர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து அமைப்புகள், அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 02.04.2020 அன்று நடைபெற்றது. 
 

அதில் மேலப்பாளையத்தின் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் நெருக்கடி மற்றும் அனைத்து அடிப்படை தேவைகள் குறித்தும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கலெக்டருடன் விவாதித்தனர். பின்னர் மேலப்பாளையம் மக்கள் சார்பில் கீழ் கண்ட கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டது.
 

 

 

dd


 

1. மேலப்பாளையத்தை தனிமைப்படுத்தி வெளி வட்டாரத்தில் பரப்பப்படும் வதந்திகளை தடுத்திட வேண்டும்.
 

2. நெருக்கடி மற்றும் கெடுபிடிகளை தளர்த்திட வேண்டும்.
 

3. மேலப்பாளையம் முழுவதும் மூடப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 
 

4. கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட நோயாளிகளை பாளை, ஜங்சன், டவுண் உள்ளிட்ட தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக சேர்க்க அனுமதி மறுக்கப்படுவதை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வேதனையோடு எடுத்து சொல்லப்பட்டது. (அதற்கு அவர் தனியார் மருத்துவர்களிடம் பேசுவதாக தெரிவித்தார். மேலும் ஹைகிரண்ட் மருத்துவமனையில் அரசு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அங்கேயும் நீங்கள் சேர்க்கலாம் என தெரிவித்தார்.) 
 

5. மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர் மற்றும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தர வலியுறுத்தப்பட்டது. செய்து தருவதாக உறுதி தெரிவித்தார். 
 

6. இரண்டு நாட்களாக குப்பைகளை அகற்ற துப்பரவு பணியாளர்கள் வரவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. (தேங்கி உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் மேலும் தெருக்கள், ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்). 

 

dd


 

7. வெளியிலிருந்து வரக்கூடிய அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை சாமான்கள், பால், கேஸ் சிலிண்டர், நியுஸ் பேப்பர் போன்றவைகளை தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். (அனைத்தும் எந்த தடையுமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்கள்). 
 

8. டவுண் போன்ற பகுதிகளுக்கு சென்று வியாபாரிகள் பொருட்கள் வாங்கிவர தடை இல்லாமல் பார்த்து கொள்ள கேட்டு கொள்ளப்பட்டது. (வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதாக தெரிவித்தார்). 
 

9. மக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக சில இடங்களில் இருக்கும் கம்பு(தடை)களை மட்டும் அகற்றிட கேட்டுக்கொள்ளபட்டது. 
 

http://onelink.to/nknapp

10. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு ஏற்பாடுகள் சரிவர செய்து தர கேட்டு கொள்ளப்பட்டது. 
 

இது போல் பல கோரிக்கைகளையும், குறைகளையும் நிவர்த்தி செய்து தர கேட்டுக்கொள்ளபட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Case against Nayinar Nagendran!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்தச் சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, நெல்லையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (16-04-24)  விசாணைக்கு வருகிறது. 

Next Story

“தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
PM Modi says DMK-Congress hates Tamil culture

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பிரதமர் மோடி இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தமிழ் மொழியை பா.ஜ.க உலக அளவில் பிரபலப்படுத்தும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்களை அமைக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது. குடும்ப கட்சியான காங்கிரஸ், காமராஜரை அவமதித்தது. எம்.ஜி.ஆர் புகழை திமுக அவமதித்தது. ஜெயலலிதாவை சட்டசபையில் மோசமாக நடத்தியது.

பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்வதை திமுக அரசு தடுக்கிறது. திமுகவும், காங்கிரஸும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது” எனப் பேசினார்.