Skip to main content

மார்க்கெட் லோடுமேன்கள் தீக்குளிக்க முயற்சி!! 5 பேர் கைது...

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

Tirunelveli - Market Loadmans

 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நெல்லை டவுன் பகுதியின் போஸ் மார்க்கெட் காய்கறி கடைகள் புதுப்பிக்கப்பட உள்ளது. மேலும் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டும், போஸ் மார்க்கெட்டின் சில்லறை காய்கறி விற்பனை கடைகள், அங்கிருந்து பொருட்காட்சி திடல், பார்வதி சேஷ மஹால் எதிர்புறம் உள்ள மைதானம், கண்டியப்பேரி உழவர் சந்தை என மாற்றப்பட உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் அதற்கான உத்தரவை அறிவித்தது. ஆனால் இந்த தற்காலிக மூன்று இடங்களுக்கு மாற்றப்படுவதையும், அங்கு செல்வதற்கும் வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஒருசிலர் பொருட்காட்சித் திடலிலும் கடைகளை அமைத்திருந்தனர்.


இதனிடையே டவுன் போஸ் மார்க்கெட் சில்லறைக் கடை வியாபாரிகளுக்கும், தரை தள வியாபாரிகளுக்கும் ஒரே இடத்தில் கடைகளை ஒதுக்கித் தர வேண்டும். மூன்று இடங்களுக்கு அலைக்கழிக்கக் கூடாது என வலியுறுத்தி டவுனை சேர்ந்த வியாபாரிகள் அழகேசன், இளஞ்செழியன், ஜெபராஜ் மற்றும் லோடு மேன்களான சுரேஷ் உள்ளிட்டோர்கள் அதிகாலை ஐந்தரை மணிவாக்கில் பெட்ரோல் கேனுடன் டவுன் போஸ் மார்க்கெட்டிற்குள் நுழைந்தனர். 

உள்ளே சென்ற 5 பேர்களும், உள் புறமாகப் பூட்டிக் கொண்டு தீக்குளிக்கப் போவதாகப் போலீசாருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க, அங்கு பரபரப்பு பற்றிக் கொண்டது.

 

ஸ்பாட்டுக்கு வந்த டவுன் போலீஸ் உதவி கமிஷ்னர் சதீஷ்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் ராமேஷ்வரி உள்ளிட்ட போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். வெளியேவர மறுத்த அவர்கள் மாநகராட்சி ஆணையர் வர வேண்டும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அடம் பிடித்தனர். இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி நெல்லை மண்டல உதவி ஆணையர் சொர்ணலதா உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கையை வலியுறுத்தியவர்கள், உறுதி தர வேண்டும் இல்லையேல் 5 பேரும் தீக்குளிப்போம் என்றும் பிடிவாதமாகத் தெரிவித்தனர்.


பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய உதவி ஆணையர் அவர்களின் கோரிக்கைப்படி ஒரே இடத்தில் ஒதுக்கும்படியான, மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் எதிரேயுள்ள மைதானத்தில் ஒதுக்கப் பரிந்துரைப்பதாக கடிதம் கொடுத்த பிறகே 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வெளியே வந்தனர். அவர்களிடமிருந்த பெட்ரோல் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வருவாய் அதிகாரியின் புகார்படி 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மாலையில் அவர்கள் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 5 லோடு மேன்களின் 3 மணி நேர தீக்குளிப்பு முயற்சிப் போராட்டத்தின் அந்தப் பகுதி தவிப்பும், பரபரப்புமாய் இருந்தது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

நெல்லை மக்களவைத் தொகுதி, விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Nellai Lok Sabha Constituency Announcement of Congress candidate for the by elections!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். அதேசமயம் தமிழகத்தின் மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தன.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆறாவது பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்திற்கு 4 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். மேலும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டின் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அளித்துள்ளார். 

Next Story

தமிழக பா.ஜ.க வேட்பாளர்கள் அறிவிப்பு; உடனடியாக பட்டியலில் நிகழ்ந்த மாற்றம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Tamil Nadu BJP Candidates Announcement; Immediate list change

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இதனையொட்டி தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகள் முடிவுற்றுள்ளன. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று (20.03.2024) முதல் தொடங்கி உள்ளது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே சமயம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 72 வேட்பாளர்கள் அடங்கிய 2 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க கடந்த 13 ஆம் தேதி (13.03.2024) வெளியிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், தூத்துக்குடி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி -  பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர்  ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

Tamil Nadu BJP Candidates Announcement; Immediate list change

அதன்படி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் தொகுதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  த.மா.காவுக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட இருப்பதால், திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.