Skip to main content

ராம் பட பாணியில் தாயின் பிரேதத்துடன் இரண்டு நாள் உறங்கிய மகன்... கொலையா? விபத்தா? போலீஸ் விசாரணை...!

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

பாசத்தின் மிகுதியால் இறந்த தாயின் பிரேதத்துடன் மகன் உறங்குவதைப் போன்று ராம் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும். கனவுத் தொழிற்சாலையில் உருவான இந்தக் கதை, நிஜத்தில் நெல்லையில் நடந்திருப்பது பீதியை கிளப்பியுள்ளது. 

 

Tirunelveli incident- Son slept with dead mother - Ram movie

 



பாளை சமாதனபுரத்திலிருப்பவர் வானமாலை. இவரின் மனைவி விமலா. இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் வழக்கம் போன்று வாடகை கொடுக்க வரும் போது விமலாவின் வீடு பூட்டி இருந்தது. அது மட்டும் இல்லாமல் வீட்டிலிருந்து அழுகிய வாடை வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் வீட்டிற்குள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது தலையில் ரத்தக் காயங்களுடன் விமலா பிணமாகக் கிடந்திருக்கிறார். அருகில் அவரது இரண்டாவது மகன் அகிலன் (48) எதுவுமே தெரியாதவாறு அப்பாவி போல் சேரில் அமர்ந்திருந்தாராம்.

பின்னர் இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளை ஏ.சி. பெரியசாமி, இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஃப்ரான்சிக் எனப்படும் தடயவியல் துறையினரும் ஆய்வு நடத்த வழக்கு 174 என்கிற செக்‌ஷனில் பதிவானது.

 



இது குறித்து போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கணவர் வானுமாலை ரயில்வேயில் வேலை பார்த்தபோது சில ஆண்டுகளில் மரணமடைய வாரிசு அடிப்படையில் அந்த வேலை மூத்த மகனுக்குக் கிடைத்தது. பின் அவர் சில ஆண்டுகளில் இறந்து விட தொடர் வாரிசாக விமலாவின் 2 வது மகன் அகிலனுக்கு (47) கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் வேலை கிடைத்திருக்கிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பே அகிலன் திருமணம் நடந்தது. ஆனால் அகிலனுக்கு மனநல கோளாறு இருப்பதை மறைத்து திருமணம் செய்து வைத்த மனைவி அவரிடமிருந்து விவாகரத்து வாங்கிச் சென்று விட்டார். 

பின்னர் அவனுக்கு 2வது திருமணம் செய்து வைக்க, அவரும் விஷயமறிந்து பிரிந்து போனார். விடாப்பிடியாக விக்கிரமாத்தித்தன் முயற்சியில் 3ம் திருமணம் செய்து வைத்தார் தாய். காரணம் அகிலனின் அனத்தல் தாங்க முடியவில்லையாம். விதி, விஷயமறிந்த 3வது மனைவியும் விட்டால் போதும் என்று பறந்து விட்டாராம். இதன் காரணமாக சிறிதளவு பாதிக்கப்பட்டிருந்த அகிலனின் மனநிலை பாதிப்பு, கூடுதலாக ரயில்வே துறை அவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது.

 



இந்த நிலையில் தன் தாயுடன் வசித்து வந்த அகிலன் மீண்டும் தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி தாய் விமலாவை நச்சரித்திருக்கிறானாம். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியிருக்கிறது. கல்யாணப் பைத்தியம் பிடித்துப் போன அகிலன், கம்பியால் தன் தாயின் மண்டையில் ஒங்கி அடிக்க மண்டை பிளந்து ரத்த வெள்ளத்தில் மடிந்திருக்கிறார் விமலா. இதில் அகிலனின் வலது கையில் காயம் ஏற்பட அதற்கு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கட்டும் போட்டுள்ளான். வழக்கமாகக் கதவைப் பூட்டி விட்டு ஹோட்டலில் சாப்பிடு விட்டு வீடு வந்தவன் எதுவும் நடக்காதது போல் தன்னுடைய அன்றாட வேலையைக் கவனித்திருக்கிறான். பிரேதம் கிடந்த வீட்டிலுள்ள அடுத்த அறையில் படுத்து உறங்கியிருக்கிறான். இரண்டு நாட்கள் இப்படி நடத்திருக்கிறது என தெரியவந்துள்ளது.  

ஆனால் மனநிலம் பாதிக்கப்பட்ட அகிலனோ, அம்மா கீழே விழுந்து இறந்துவிட்டார் என்று பித்து பிடித்தவன் போல கூறிவருகிறான். அவனுக்கு இயல்பிலேயே மனநிலை பாதிப்பா. அதற்கு அவன் சிகிச்சை எடுத்தானா? என்று விசாரணை நடக்கிறது. மேலும் உடற்கூறு அறிக்கை வந்த பிறகே கொலையா?. அவர் கீழே விழுந்ததில் அடியா என்று தெரியவரும் என்கிறனர் விசாரணை அதிகாரிகள். விசாரணையின் முடிவில் இவன் கல்யாணப் பைத்தியமா?. காரியப் பைத்தியமா? என்பது தெரியவரும். 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.