Skip to main content

திருச்சி விமான நிலைத்திற்கு வந்த 34 பயணிகள் தனிமைப்படுத்தி சிகிச்சை !

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

 

திருச்சி காந்தி சந்தையை இடம் மாற்றம் செய்ய, திருச்சி மணிகண்டம் அடுத்த கள்ளிக்குடியில் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டது. வியாபாரிகள் அங்குச் சென்று வியாபாரம் செய்ய முன்வரவில்லை. அந்தக் கட்டிடம் 75 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனோ சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
 

இந்நிலையில் 19.03.20 அன்று துபாய், சார்ஜா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து, 2 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், டைகர் ஆகிய 3 விமானங்களில், திருச்சி விமான நிலையத்திற்கு 431 பயணிகள் வந்து இறங்கினர். இவர்களில் 27 பயணிகளைச் சந்தேகத்தின் அடிப்படையில் கள்ளிக்குடி கட்டிடத்தில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

 

check up



 

நேற்று (20.03.20) திருச்சி வந்த 26 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதாகக் கூறி, திருச்சி கள்ளிக்குடி சிறப்பு சுகாதார வளாகத்தில் மருத்துவ கண்காணிப்பில் வைக்க அழைத்துச்சென்றனர்.
 

அதனைத் தொடர்ந்து இன்று திருச்சி வந்த 34 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதாகக் கூறி, திருச்சி கள்ளிக்குடி சிறப்பு சுகாதார வளாகத்தில் மருத்துவ கண்காணிப்பில் வைக்க அழைத்துச்சென்றனர்.
 

இன்று திருச்சி பத்திரிகையாளர்களிடம் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு பேசுகையில், 22.03.2020 சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சியில் கூட்டமாக யாரும் கூடினால் காவல்துறையை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் 34 பேர் கள்ளிக்குடி கண்காணிப்பு மையத்தில் வைத்து கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என கண்காணிக்கப் படுகிறார்கள். நான்கு பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் உள்ளதாகவும் தெரிவித்தார். நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் பொதுமக்களைப் பீதியடைய செய்யும் வகையில் வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கொதிக்கும் சாம்பாரில் விழுந்தும் தப்பிய சிறுவன்; உயிரைப் பறித்த அறுவை சிகிச்சை 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
The boy who fell into the boiling sambar and escaped; Surgery that took life

கொதிக்கும் சாம்பாரில் தவறுதலாக விழுந்த சிறுவன் தழும்பு நீக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் மதன்(3). செல்வம் வீட்டுக்கு அருகிலேயே உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி கடையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மதன், ஹோட்டலில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் தவறுதலாக விழுந்துள்ளார். அலறித்துடித்த மதனின் குரலைக் கேட்ட கடை ஊழியர்கள் உடனடியாக மதனை காப்பாற்றினர். இதில் சிறுவனின் வலது கை வெந்து போனது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மதன் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தான்.

தொடர்ந்து மதனின் கை பகுதியிலிருந்த தீக்காய தழும்புகளை சரி செய்ய வேண்டும் என பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். தீக்காய தழும்பு நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதை ஒப்புக் கொண்ட பெற்றோர்  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென சிகிச்சையின்போது சிறுவன் மதன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோர் தரப்பில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை அளிக்காததால் மகன் இறந்து விட்டதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பிழைத்த சிறுவன் அதனால் ஏற்பட்ட தீக்காய தழும்புகளை சரி செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.