Skip to main content

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு குறை முறையீட்டுக் குழு அமைக்க திருச்சி பெண் வழக்கறிஞர்கள் கோரிக்கை!

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

திருச்சி நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர் ஜெயந்திராணி, சித்ரா விஜயகுமார் ஆகியோர் இன்று மாலை திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சமூக வலைதளங்களை பயன்படுத்தி இளம் பெண்களை கவர்ந்து சில கும்பல்கள் பாலியல் ரீதியான வன்முறைகள், மன ரீதியான வன்முறைகள், உடல்ரீதியான துன்புறுத்தல்கள், உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்துதல், வார்த்தைகளால், செய்கைகளால் துன்புறுத்தப்படுதல், செல்லிடை பேசி மூலம் டிஜிட்டல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஆபாசமாக ஒலி,ஒளி பதிவினை செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு மிரட்டியுள்ளனர். அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 Tiruchirapalli attorneys request to set up a complaint against Pollachi victims

 

இக் கும்பலால் எண்ணற்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சுமார் 7 ஆண்டுகளாக பல பெண்களை அடித்து புணர்விற்கு வற்புறுத்தி பிற வகையில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ள செய்திகள் ,சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களை பார்த்த, நாளிதழ்கள் மற்றும் வார இருமுறை இதழ்களில் பிரசுரமான செய்தியினை படித்த எங்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டவர்கள், தொல்லை கொடுத்தவர்கள், பெண்களிடம் அச்சம் ஏற்படுத்தி , தயக்கம் கொடுக்கவும், புகார் கொடுப்பதையும் தவிர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள். 

 

 Tiruchirapalli attorneys request to set up a complaint against Pollachi victims

 

எனவே நீதி துறை சார்பில் குறை தீர்க்கும் அமைப்பு குறை முறையீட்டுக் குழு, சிறப்பு ஆலோசனையாளர்கள் நியமித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு பணிகளையும், ரகசிய காப்பையும் உருவாக்கி குழுவுக்கு , ஒரு பெண்ணை தலைமை ஏற்கச் செய்ய வேண்டும். மேல் நிலையில் இருந்து வரும் செல்வாக்கையும் வற்புறுத்தலும் தவிர்க்க குறை முறையீட்டு குழுவில் அரசு சார்பற்ற பாலியல் துன்புறுத்தல்கள் தொல்லைகள் பற்றிய பரிச்சயமான அமைப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் . குறை முறையீட்டை பரிசீலிக்க குறிப்பிட்ட காலத்தில் இதை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இந்நிகழ்வில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து உண்மையான குற்றவாளிகளை தண்டித்தும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும் வேண்டும் என கோரிக்கை மனுவை கொடுத்தள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

'எனக்கு வேண்டாம் என் தம்பிக்கு சீட்டு கொடுங்க'-துரை வைகோவை ஆதரித்து கமல் பிரச்சாரம்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'I don't want; to give seat to my brother' - Kamal campaign in support of Durai Vaiko

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் திருச்சியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், '' இந்தியாவில் எந்த இடத்தில் மத கலவரம் நடந்தாலும் தமிழ்நாட்டில் மிகக் குறைவு. அதுவும் திருச்சியில் இல்லை என்று சொன்னால் மிகை ஆகாது. நல்ல அரசு, நல்ல தலைமையின் அடையாளம் அது. அது தொடர வேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறேன்.

நான் மதிக்கும் மிக முக்கியமான புத்தகம் 'இந்திய அரசியலமைப்புச் சட்டம்' அந்த புத்தகம் பாதுகாக்கப்பட்டால் தான் நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்கள் எல்லாம் பாதுகாக்கப்படும். எந்த புத்தகமாக இருந்தாலும் சரி. நான் மதம் சார்ந்த புத்தகங்களைப் பற்றி சொல்லவில்லை. அதை எழுதக்கூடாது, இதை படிக்கக்கூடாது என்று சொல்லும் பன்முகத்தன்மை, விரிந்த நோக்கம் இல்லாத எந்த அரசும் ஆபத்தானது. அவை குடியுரிமைச் சட்டங்கள் மற்றும் அரசியல் சட்டங்களின் மீது கை வைக்க தொடங்கும். அதைப்பற்றி விமர்சிக்க வேண்டியது என் கடமை. ஐந்தாண்டுக்கு ஒரு முறை அந்த கடமையை நீங்கள் செய்து கொண்டே இருந்தால்தான் நாடு நலமாக இருக்கும். நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை நாட்டுக்காக வந்திருக்கிறேன். எனக்கு ஒரு சீட்டு சின்ன பிள்ளையிலிருந்து கொடுத்து வைத்திருக்கிறீர்கள், இப்போது என் தம்பிக்கு சீட்டு கொடுங்க என கேட்கிறேன்.  '' என்றார்.

Next Story

1,400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; இருவர் கைது

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
1,400 kg ration rice smuggling; two arrested

திருச்சியில் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்ற 1,400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட ரோந்து மற்றும் வாகன சோதனையின்போது, திருச்சி தென்னூர் ரங்கநாதபுரம் ஆபீஸர்ஸ் காலனி அருகே நான்கு சக்கர வாகனத்தில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நிகழ்விடம் சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதில், இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு வந்த ரேஷன் அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது. அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் தென்னூர் குத்பிஷா நகரைச்சேர்ந்த ப.அப்துல் சுக்கூர் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஹ.சதாம் உசேன் (32) என்பதும், ரேஷன் அரிசியை பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும், அந்த வகையில் விற்பனைக்காக அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1,400 கிலோ அரிசி, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.