Skip to main content

கிராம மக்களின் சேமிப்பு பணத்தை கோடிக்கணக்கில் மோசடி செய்த தபால் ஊழியர்கள்

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திங்களூர் கிராம தபால் நிலைய அலுவலகத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களின் சேமிப்பு பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.   பணம் கட்டிய நூற்றுக்கணக்கான பொது மக்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

po

 

 திங்களூர் தபால் நிலையத்தின் கிளை அஞ்சல் நிலையமான வெட்டயங்கிணறு பகுதியில் பகுதி நேர அஞ்சல் நிலையம் உள்ளது.  இதில் செல்வராஜ் மற்றும் பஞ்சையன் ஆகிய தபால் ஊழியர்கள்  பணிபுரிந்து வருகின்றனர்.  திங்களூர் தபால் நிலையத்தை சுற்றி  பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. தபால் ஊழியரான  செல்வராஜ் கடந்த 25 ஆண்டுகளாக இங்கு இருந்து வருகிறார்.   இவர் மீது பொதுமக்கள் அதிக நம்பிக்கை வைத்தனர். 

 

இதனால்  அஞ்சல் நிலையத்தில் 1500க்கும் மேற்பட்ட புதிய கணக்குகளை மக்கள் தொடங்கி பணம் கட்டி வந்தனர்.   ஒரு கட்டத்தில் வங்கி கணக்கு புத்தகத்தை அவரிடமே கொடுத்து பணத்தையும் டெபாசிட் செய்துள்ளனர்.   இதில் 100 க்கும் மேற்பட்ட டெபாசிட் என்று செல்லக்கூடிய நிரந்தர வைப்பு நிதியும் உள்ளது.

 

  பெரும்பாலான பொது மக்களிடம்  லட்சக்கணக்கில்  பணம் பெற்றுக்கொண்டு தபால் நிலையத்தில் பணமே செலுத்தப்படவில்லை.   வைப்பு நிதி என்பதால் பல வருடங்களாக யாரும் இதனை கவனிக்கவில்லை.  இது தவிர மாதாந்திர சேமிப்பு தொகை இதனையும் முறையாக கணக்கில் செலுத்தவில்லை.  

 

பாலிசி கணக்கு தொகையை கூட விட்டு வைக்காமல் எடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் செல்வராஜ் உடன் பணி புரியும் பஞ்சையன் திடீரென பணத்தை கையாடல் செய்ததாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை பொதுமக்களிடம் தெரிவிக்காமலே தபால் துறையினர் அலட்சியமாக விட்டுவிட்டனர்.

 

po

 

தற்போது வைப்பு தொகை முதிர்வடைந்து பணம் எடுக்க வந்த  ஒருவரின் பணம் கணக்கில் இல்லாததால் செல்வராஜை கேட்டுள்ளனர்.   அதற்கு அவர் ஏற்கனவே இருந்த ஊழியர் கையாடல் செய்து விட்டதாகவும் எனக்கு ஏதும் தெரியாது என கூறியுள்ளார்.    இதனால் பணம் செலுத்திய அனைவரும் திங்களூர் தபால் நிலையத்தில் வந்து சோதனை செய்து பார்த்தபோது ஒவ்வொருவர் கணக்கிலும் வெறும் 100 ரூபாய் மட்டுமே இருந்தது. பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் கண்ணீருடன் பணம் இல்லாத வங்கி கணக்கு புத்தகத்தை வைத்து பணம் திரும்ப வருமா என அதிகாரிகளை கேட்டனர்.

 

அப்போது அங்கே வந்த அஞ்சலக மக்கள் குறை தீர்க்கும் அதிகாரி லாவண்யா வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டு தபால் நிலையத்தில்  கட்டாமல் இருக்கும் தொகையை மட்டுமே தவறு செய்தவர்களிடம் வசூலிக்கமுடியும்.    மற்ற தொகைகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என கூறியிருக்கிறார்.  பொதுமக்களின் வாக்குமூலத்தை வைத்து பார்க்கும்போது கோடிக்கணக்கில் இருக்கும் என தெரிகிறது.     பொதுமக்கள் சிலர் ஆளுங்கட்சி அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களை அழைத்து மீட்டு தரும்படி கேட்டுக்கொண்டனர்.   அப்போது தான் அவர்களும் ஏமாந்தது தெரியவந்தது.   இந்த சம்பவம் பெருந்துறை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறப்பு தபால் தலைகளை வெளியிட்ட பிரதமர் மோடி!

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Prime Minister Modi released special postage stamps

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு பிரபலங்கள், பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் பாஜக, ராமர் கோவிலை அயோத்தியில் கட்டி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தது. அதேபோன்று கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக ராமர் கோவில் விவகாரத்தை வைத்து பிரச்சாரம் நடத்தி இருந்தது.

அதே சமயம் தொடர்ந்து பாஜக இரண்டு முறை மத்தியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிற நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. கோவில் வேலைகள் முழுமையாக முற்றுப்பெறாத நிலையில், பாஜக அரசு தேர்தலை காரணம் காட்டி முன்கூட்டியே கோவிலை திறப்பதாகவும், இது அரசியல் செயல்திட்டம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

இந்நிலையில் பிரதமர் மோடி ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயம் தொடர்பான ஆறு சிறப்புத் தபால் தலைகளை வெளியிட்டார். இது குறித்து பிரதமர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், “புனித அயோத்தி தாம் மற்றும் பகவான் ஸ்ரீ ராமரின் பாரம்பரியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட நினைவு அஞ்சல் தலையை வெளியிடும் பாக்கியம் இன்று கிடைத்தது. இந்நிகழ்ச்சியில், உலகம் முழுவதும் ஸ்ரீராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகள் தொடர்பான புத்தகமும் வெளியிடப்பட்டது. நினைவு தபால் தலையும், இந்தப் புத்தகமும், ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலின் கும்பாபிஷேகத்தின் மங்களகரமான நிகழ்வை பல தலைமுறைகளுக்கு நினைவூட்டும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

மும்பையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில்; 12 மணி நேரம் செயல்படும் மத்திய அரசு நிறுவனம்!

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

following mumbai in tamilnadu central government agency that operates for 12 hours
கோப்பு படம்

 

தொலைத்தொடர்பு வசதிகள் அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில் ஒரு தகவலை ஒரே நிமிடத்தில் உலகின் எதிர் திசையில் இருப்பவரிடம் கொண்டு சேர்க்க முடிகிறது. ஆனால், உலகமயமாக்கல் நிகழ்வதற்கு முன்பு வரை ஒரு தகவலை அடுத்த மாவட்டத்திற்கு எடுத்துச் செல்வது என்பதே பெரும் காரியமாக இருந்து வந்தது. அந்தக் காலங்களில் தகவல் பரிமாற்றத்திற்கு பெரும் உதவியாக இருந்தது தபால் துறை. அரசுத் துறையான தபால் துறை தொலைத்தொடர்பு வசதிகள் பெருகத் தகவல் பரிமாற்றத்தில் தேக்கம் கண்டது. ஆனால், மாறி வரும் காலச் சூழலுக்கு ஏற்ப மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை எளிதாக்க பல்வேறு முயற்சிகளை தபால் துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இணைய வங்கி சேவை, காப்பீடு வழங்குதல் போன்றவற்றை முன்னெடுத்து வருகிறது.

 

சமீபத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலைத் திட்டம் பலத்த எதிர்ப்புக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டது. மத்திய அரசு இந்த 12 மணி நேர வேலைத் திட்டத்தை முன்னெடுக்கத் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் 60 தபால் நிலையங்களில் 12 மணி நேரச் சேவைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு அது தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல்  முறையாக பகல் 12 மணி நேரமும் செயல்படும் வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் தபால் நிலையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இந்த தபால் நிலையமானது காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை அனைத்து சேவைகளும் பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

 

மேலும் வங்கி பரிவர்த்தனை சேவைகளான சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, பொது வருங்கால வைப்பு கணக்கு, குறித்த கால வைப்பு கணக்கு,  மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், மாதாந்திர வருமான கணக்கு, அடல் பென்ஷன் திட்டம், அஞ்சல் காப்பீட்டு பரிவர்த்தனைகள், தபால் சேவையில் பதிவு தபால், விரைவு தபால், பார்சல் சேவைகள், அயல்நாட்டு தபால் சேவை, விபிஎல், விபிபி தபால் சேவைகள், மணியார்டர் போன்ற சேவைகளும் 12 மணி நேரமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.