Skip to main content

காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல்; தாசில்தார் பலி!

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

tindivanam tahsildar venkadasubramaniyan car incident at cheyyar

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன் (வயது 54). திண்டிவனத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பூங்கோதை (வயது 48). இவர்களது மகன் சிவசங்கரன். இவர்கள் மூன்று பேரும்,  நேற்று முன்தினம் காலை காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவிலுக்கு வழிபாடு செய்ய காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். காரை சிவசங்கரன் ஓட்டிச் சென்றுள்ளார்.

 

காஞ்சிபுரத்தில் சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு மூவரும் ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். இரவு 10 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில், செய்யாறு அருகே நெடுங்கல் கூட்ரோடு பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது மேல்மருவத்தூரில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. நெடுங்கல் கூட்ரோடு அருகே எதிர்பாராத விதமாக லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த தாசில்தார் வெங்கட சுப்பிரமணியனின் தலை, முகம் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி பூங்கோதை, மகன் சிவசங்கரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

 

அந்த வழியாக சென்றவர்கள் விபத்தை பார்த்துவிட்டு அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வெங்கட சுப்பிரமணியன் உறவினர் விக்னேஸ்வரன் என்பவர் அனக்காவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் பாலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கட சுப்பிரமணி உடலை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு காரை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

தாசில்தார் வெங்கட சுப்பிரமணியன் விழுப்புரம் வருவாய்த் துறையில் பல்வேறு ஊர்களில் பணியாற்றியுள்ளார். அப்போது பொதுமக்கள், அரசு ஊழியர்களிடம் மிகுந்த அக்கறையோடு பழகி உள்ளார். பொதுமக்களின் கோரிக்கைகள் பிரச்சினைகளை நல்ல முறையில் தீர்த்து வைத்துள்ளார். மேலும் வெங்கட சுப்பிரமணியன் மறைவு அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

Next Story

காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
madurai thirumangalam nearest two wheeler car incident

மதுரையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை என்ற பகுதியில்  திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் மதுரையில் உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் திருமங்கலம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.