Skip to main content

ரேஷன் கடை திறப்பு விவகாரம்; போராட்டத்தில் குதித்த அதிமுக எம்.எல்.ஏ

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

tindivanam admk mla arjunan ration shop related issue

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ளவர் அதிமுகவைச் சேர்ந்த அர்ஜுனன். திண்டிவனம் அருகில் உள்ள ஏப்பாக்கம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் பகுதி நேர ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தக் கடை ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் இருப்பதால் பொதுமக்களுக்கு கடைக்கு சென்று வர ஏதுவாக இல்லை என்று கூறி ரேஷன் கடையை பொதுமக்கள் வசதியை முன்னிட்டு ஊருக்கு மத்தியில் புதிதாக ரேஷன் கட்டி திறக்க வேண்டும் என்று பகுதி மக்கள் எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

இது தொடர்பாக எம்.எல்.ஏ மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் அந்த ரேஷன் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்ட பிறகும் அந்தக் கடையை மாற்றம் செய்யப்படவில்லை. இது குறித்து அதிமுக எம்.எல்.ஏ அர்ஜுனன் மாவட்ட கூட்டுறவு அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அந்த ரேஷன் கடை அதே கிராமத்தில் உள்ள சேவை மையத்தின் அருகில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. முறையான திறப்பு விழா நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் எம்.எல்.ஏ அர்ஜுனன் கடை திறப்பு விழா செய்ய ஏப்பாக்கம் கிராமத்திற்கு சென்றிருந்தார். ஆனால் ரேஷன் கடை திறப்பதற்கு குறித்து எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்க செயலாளரிடம் எம்.எல்.ஏ விசாரித்த போது அவர்கள் எந்தவித பதிலும் கூறவில்லை. காரணம் ஏப்பாக்கம் ரேஷன் கடை உட்பட அப்பகுதியில் புதிதாக மேலும் மூன்று ரேஷன் கடைகளை அமைச்சர் மஸ்தானை வைத்து திறக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

 

கடை திறப்பது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறி அதன்படி கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை தன்னை அழைக்காமல் அமைச்சரை மட்டும் அழைத்து திறப்பு விழா நடத்த அதிகாரிகள் மறைமுகமாக முடிவு செய்து இருந்ததை கண்டு அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ அர்ஜுனன் கட்சியினர்களுடன் ரேஷன் கடைக்கு எதிரில் நின்று தர்ணா நடத்தியுள்ளார். காலை 11 மணி வரை போராட்டம் நடத்திய பிறகு கூட்டுறவுத் துறை அதிகாரிகள் எம்.எல்.ஏ கடையை திறப்பதற்கு அனுமதித்துள்ளனர் இதை தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் புதிய ரேஷன் கடையை அதிமுக எம்.எல்.ஏ அர்ஜுனன் திறந்து வைத்து ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.