தடை செய்யப்பட்ட பட்டாசுகளைத் தயாரிக்கவோ, விற்கவோ, வாங்கவோ கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கானநேரத்தைத்தமிழக அரசு அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் -காலநிலை மாற்றத்துறைவெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளையேமக்கள் வெடிக்க வேண்டும்.ஒலி மாசுகளை ஏற்படுத்தும் சரவெடி உள்ளிட்ட பட்டாசுகளைவெடிப்பதைத்தவிர்க்க வேண்டும். மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம்,வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில்பட்டாசுகளைவெடிக்க வேண்டாம்.குடிசைப்பகுதிகளில்எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ள இடங்களில் பட்டாசுவெடிப்பதைத்தவிர்க்க வேண்டும்எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.