Skip to main content

கொலை முயற்சியில் இறங்கினாரா டிக் டாக் மூலம் புகழ் பெற்ற சுகந்தி? பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

தேனி மாவட்டம் கொடுவில்லார் பட்டி அடுத்த நாகலாபுரத்தை சேர்ந்தவர் டிக் டாக் சுகந்தி. இவர் டிக் டாக்கில் பதிவிட்ட வீடியோவால் ஏராளமானவர்கள் இவரை டிக் டாக்கில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் சுகந்தி ஆண் நண்பர்களுடன் அதிகளவில் பழகியதாக சொல்லப்படுகிறது. பின்பு நெட்டிசன் ஒருவர் சுகந்தி குறித்தும், நாகலபுரத்து பெண்கள் குறித்தும் தகாத வார்த்தைகளால் பேசி வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாகலாபுரம் கிராம பெண்கள், பி.சி.பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சுகந்தியை ஊரை விட்டு வெளியேற்ற வலியுறுத்தினர்.  டிக் டாக்கில் சுகந்தியின் செயல்பாடுகளால் கிராமத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். பின்பு சுகந்தி மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
 

suganthi



இதனையடுத்து சுகந்தியின் நடவடிக்கை ஊருக்கு அவபெயரை கொடுத்ததால், கோபமான ஊர் பொதுமக்கள் சுகந்தி மற்றும் அவரது சகோதரியை ஊரை விட்டு வெளியேற்றியுள்ளனர். இதன்பின்னர் தன்னை ஊரை விட்டு விரட்ட காரணமாக இருந்த இரண்டு இளைஞர்களுக்கும், சுகந்திக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்ததாகவும், இதன் காரனமாக தனது புதிய ஆண் நண்பர்களுடன் இணைந்து கூலிப்படை மூலம் அவர்கள் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் டிக்டாக்கில் வெளியான ஆடியோ உரையாடல் ஒன்றின்மூலம் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிக் டாக்கால் சமூகத்தில் ஏற்படும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.  

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.