Skip to main content

டிக்டாக் செய்யும் அனைவருக்கும் நான் ஒன்று சொல்கிறேன்... சித்ரா காஜல் 

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

 

டிக்டாக் செயல்பாட்டாளர் சித்ரா காஜல் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டிக் டாக் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
 

அப்போது அவர், டிக்டாக்கை நல்ல விதமாக பயன்படுத்தினால் நல்ல விதமாக போய்க்கொண்டிருக்கும். கெட்ட விதமாக பயன்படுத்தினால் விபரீதமாகத்தான் முடியும். என்னோட வீடியோ பார்த்துவிட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்றிருந்த பலர் பலன் அடைந்துள்ளனர். சினிமாவில் நுழைவது கடினம். தங்களது திறமைகளை டிக்டாக்கில் வெளிப்படுத்தி சினிமாவில் பலர் நுழைந்துள்ளனர் என்று கூறினார்.


 

 

 chitra kajal


டிக்டாக்கை கொண்டு வந்த சீனா, இதனை டிவுண்டோடு பண்ணுவதிலும், அப்லோடு செய்வதிலும் முதலிடத்தில் இல்லை. இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. டிக்டாக்கால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. டிக்டாக் இல்லாமல் வாழ முடியாதா? என்ற கேள்விக்கு,


இந்த உலகம் போகிற போக்கில் நாமும் அதனுடன் சேர்ந்து ஓடிக்கொண்டிருக்க வேண்டும். என்னை இந்த உலகுக்கு தெரியாது. இந்த டிக்டாக் மூலமாகத்தான் தெரியும்.  அதுபோன்ற நல்ல விசயங்களுக்கு பயன்படுத்த வேண்டும். சினிமாவுக்கு செல்கிறோம். அதில் காட்டப்படும் நல்ல காட்சிகளை மட்டும்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் காட்டப்படும் கெட்ட விசயங்களை தியேட்டரிலேயே விட்டுவிட வேண்டும். டிக்டாக் கம்பெனி ஏதோ மக்கள் சந்தோஷப்படட்டும் என விட்டுள்ளது. அதனால இது கெட்டுப்போனது, அது கெட்டப்போனது என்று கூறுவதா? 



டிக்டாக்கால் நிறைய பேர் சந்தோஷப்படுகிறார்கள். டிக்டாக் செய்யும் அனைவருக்கும் நான் ஒன்று சொல்கிறேன், டிக்டாக்கே வேண்டாம் என்று சொல்லுகிறார்கள். அந்த நிலைமைக்கு கொண்டுபோகிற ஒரு சிலரால் நிறையே பேர் பாதிக்கப்படுகிறார்கள். மனைவிக்கு பிடிக்கவில்லையா விட்டுவிடணும், கணவனுக்கு பிடிக்கவில்லையா விட்டுவிடணும், அதை மீறி செய்வதால் சிலர் தற்கொலை செய்து கொள்வதால், அந்த தற்கொலைக்கு டிக்டாக்தான் காரணம் என்று சொல்லுகிறார்கள். டிக்டாக்கை நல்ல விதமாக செயல்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கெட்டவர்களை மட்டும் காயப்படுத்துவேன்' - கொலை செய்துவிட்டு பதிவு போட்ட டிக்டாக் பிரபலம்

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

'I only hurt the bad guys' - Tik Tok celebrity who recorded after killing

 

பெங்களூரில் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் சிஇஓ ஆகிய இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலைக்கு காரணமாக இருந்த இன்ஸ்டா, டிக்டாக்  பிரபலம் போட்ட பதிவு வைரலாகி வருகிறது.

 

பெங்களூரின் வடகிழக்கு தியான பம்பை எக்ஸ்டென்ஷனில் 'ஏரோனிக்ஸ் இன்டர்நெட் பிரைவேட் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணீந்திர சுப்ரமண்யா என்பவரும் சிஇஓவாக வினு குமார் என்பவரும் இருந்தனர். இவர்கள் இருவரையும் மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினர். இதில் அலுவலக வளாகத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

 

'I only hurt the bad guys' - Tik Tok celebrity who recorded after killing

 

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் அதே நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்த பெலிக்ஸ் என்ற முன்னாள் ஊழியர் இந்த கொலையில் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. டிக்டாக் பிரபலமான பெலிக்ஸ் சில மாதங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். தனது நிறுவனத்திற்கு ஏற்படும் போட்டியை தடுக்கவே இருவரையும் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இந்த கொலையில் ஈடுபட்ட பெலிக்ஸ் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

கொலை நிகழ்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பெலிக்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இந்த கிரக மக்கள் எப்போதும் ஏமாற்றுக்காரர்கள். அதனால் இந்த கிரக மக்களை காயப்படுத்துவேன். கெட்டவர்களை மட்டுமே காயப்படுத்துவேன். எந்த நல்ல மனிதர்களையும் காயப்படுத்தமாட்டேன்' எனப் பதிவிட்டுள்ளார். இதை வைத்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Next Story

மீசை வினித் மீண்டும் கைது

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

Mustache vinith again arrested

 

கேரளாவில் டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர் மீசை வினித். இவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்திருந்த நிலையில், தற்போது வழிப்பறி சம்பவத்தில் மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கடந்த மாதம் 23 ஆம் தேதி பெட்ரோல் பங்கின் மேலாளர் ஒருவர் வங்கியில் பணம் செலுத்துவதற்காக 2.5 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து பிடித்து மிரட்டி 2.5 லட்சம் ரூபாய் பறித்துச் சென்றனர்.

 

இதுகுறித்து அந்த பெட்ரோல் பங்க் மேலாளர் காவல்துறையில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருவனந்தபுரம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட மீசை வினித் மற்றும் அவனது கூட்டாளி ஜீத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தைக் கொண்டு பெட்ரோல் பங்க் மேலாளரை துரத்தி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.