The tiger who sneaked into the hotel ... Shocked by the CCTV footage!

நீலகிரி வனப்பகுதிக்கு உட்பட்ட தனியார் தங்கும் விடுதியில் நள்ளிரவில் புலி ஒன்று விடுதிக்குள்ளேநுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர்புலிகள் காப்பகம் ஆகியவை ஒன்றிணைந்த பகுதியில் சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம்இரவு முதுமலை-பந்திப்பூர் வன எல்லையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சுமார் இரவு 10 மணிக்குப் புலி ஒன்று உள்ளே புகுந்துள்ளது.

யாரும் இல்லாத நேரத்தில் nவிடுதியின் கதவு திறந்திருந்தநிலையில் சுமார் 7 வயது மதிக்கத்தக்கப் புலி உள்ளே புகுந்துசமைக்கும் அறை வரை சென்று சுற்றிவிட்டுமீண்டும் விடுதியை விட்டு வெளியேறியது. இந்த காட்சிகள் விடுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அந்தவிடுதி வளாகத்தில் புலி உலாவியகாட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment