Advertisment

கூலித்தொழிலாளியை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம்... 4 பேர் கைது!

tied to a tree and beaten incident ... 4 arrested!

தஞ்சைபாபநாசம் அருகே, விவசாயத்தொழிலாளியை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம்தெடர்பானவீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திருந்தது. இந்தச் சம்பவத்தில்8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போதுநான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

தஞ்சைபாபநாசம், அம்மாபேட்டை, பூண்டி மேலத்தெருவைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளி ராகுல்என்பவரை, பச்சைத் துணியால் கண்ணைக் கட்டிஅதே பகுதியைச் சேர்ந்தசிலஇளைஞர்கள் மரத்தில் கட்டி வைத்துபிரம்பால் அடித்துள்ளனர்.வலியைத் தாங்க முடியாமல் அந்த கூலித் தொழிலாளி ''வேணாம்அண்ணா... வேணாம் அண்ணா...'' எனகதறி, மயக்கமடைந்த நிலையிலும் கடுமையாக தாக்கப்பட்டார். அதுதொடர்பான வீடியோ காட்சிகள்சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் கண்டனங்களைப் பெற்றது. செய்யாத குற்றத்திற்காக தான் தாக்கப்பட்டதாக கூறியகூலித்தொழிலாளி ராகுல், இதனால் மனமுடைந்து விஷம் அருந்திதற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

பணம் திருடியதாகக் கூறி கூலித்தொழிலாளி தாக்கப்பட்டதும், தாக்குதல் சம்பவத்தின்போது அருகில் இருந்தவர்கள் அந்தக் காட்சிகளை வீடியோவாக பதிவுசெய்து அதை சமூகவலைதளத்தில் பரப்பியதும் தெரிய வந்துள்ளது. அதேபோல்பணம் திருடியதாக எந்த காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.இருப்பினும்கூலித் தொழிலாளியைத் தாக்கும் அந்த வீடியோ காட்சியும்,அவர் கதறும் காட்சியும் காண்போரைப் பதற வைத்தது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாகவிக்னேஷ்வரன்,விவேக், பார்த்திபன் உட்பட 8 பேர் மீதுகொலை முயற்சி, வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ள போலீசார்4 பேரைகைது செய்துள்ளனர்.

attack police Thanjai video
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe