Skip to main content

ரயில் கழிப்பறையில் மாணவியை ரகசிய வீடியோ எடுத்த டிக்கெட் பரிசோதகர் கைது..!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

TTR
மேகநாதன்

 

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு, கடுமையான தண்டனைகள் கொண்டுவந்தும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறைந்தபாடில்லை. குறிப்பாக ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ரயில்வே டிக்கெட் பரிசோதகர்களால் அடிக்கடி பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அதில் பல சம்பவம் வெளியில் தெரிவதில்லை. ஒன்று, இரண்டு சம்பவங்கள் மட்டுமே வெளியே தெரியவருகின்றது. 

 

சென்னை கொளத்தூரை சேர்ந்த லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 22 வயதான இவர் கோவையில் பிரபல கல்லூரியில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்துவருகிறார். கரோனா தொற்று காரணமாக விடுதியை காலி செய்ய அறிவுருத்தப்பட்டிருந்ததால். கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி விடுதியை காலி செய்துவிட்டு சென்னைக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து சென்னைக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். விடியற்காலை சென்னையை நெருங்கிகொண்டிருந்த வேளையில், இயற்கை உபாதை கழிக்க ரயில் கழிவறைக்கு சென்றபோது, ரயில் கழிவறை ஜன்னல் கண்ணாடியில் தன்னை யாரோ படம்பிடிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சாமர்த்தியமாக ஆடைகளை சரிசெய்து கொண்டு வேகமாக வெளியே வந்து, படம்பிடித்த நபரை பிடித்தார்.

 

Vijayalakshmi
விஜயலட்சுமி

 

பிறகு சக பயணிகள் உதவியுடன் ரயில்வே போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் அவர் அதே ரயிலில் டிக்கெட் பரிசோதகர் என்பதும் அவர் சேலம் மாவட்டம், சூரமங்கலத்தை சேர்ந்த 26 வயதான மேகநாதன் என்பதும் தெரியவந்தது. மேகநாதனின் மொபைல் போனை பறிமுதல் செய்து பார்த்ததில் மாணவி கழிவறையில் இருந்தபோது ரயில் படிகெட்டு வழியில் நின்று வீடியோ எடுக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் பல பெண்களை ஆபாச படமெடுத்து வாட்சாப்பில் அனுப்பியிருந்ததும் மேலும் இதற்காக தனியாக ஆபாச வாட்சாப் குரூப்பை நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. உடனே மாணவியின் புகாரின் பெயரில் பெரம்பூர் ரயில்வே போலீசாரின் தகவலின்படி அரக்கோணம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி டிக்கெட் பரிசோதகர் மேகநாதனை கைது செய்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தேர்தல் விடுமுறை; நெரிசலால் உயிரைப் பணயம் வைக்கும் பயணிகள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Passengers risking their lives due to congestion

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.