Skip to main content

காவல் நிலையத்தைக் கலாய்த்த டிக்டாக்! -ஆக்ஷனுக்கு எதிராக ஆக்ஷன்!

Published on 12/01/2019 | Edited on 12/01/2019

சிவகாசி கிழக்கு காவல் நிலையைத்தில் அடுத்தடுத்து பதிவு செய்த இரண்டு வழக்குகளும் ‘போதை’ சம்பந்தப்பட்டவை. கைது செய்யப்பட்டவர்கள் இளைஞர்களாக உள்ளனர். 

அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட ரூ.6.5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் சிவகாசி பாறைப்பட்டி சோதனைச்சாவடியில் சிவகாசி பாறைப்பட்டி சோதனைச் சாவடியில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த வேனில் வந்த மூன்று இளைஞர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 98 ஆயிரமும் கைப்பற்றப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது.  

 

tick tak  to a police station! Action Against Action!

 

தமிழகத்தில் பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனையெல்லாம் ஜுஜுபி தான்! இதைக் காட்டிலும் பெரிய விவகாரமாக இருக்கிறது, இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்ட வழக்கு.  அது என்னவென்று பார்ப்போம்!

 

‘வந்த இடத்துல வாயை வச்சிட்டு சும்மா இருக்காம.. தேவையில்லாம பேசி மாட்டிக்கிட்டானுவ..’ என்று சிவகாசி போலீசார்கள்  சிரித்தபடி சொன்ன விவகாரம் இது –

சிவகாசி துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வர்,  பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு, வாகனத்தில் செல்வதற்கு அனுமதி கேட்டு சிவகாசி கிழக்கு காவல் நிலையம் வந்தனர். காவல் நிலையங்களின் மீது அவர்களுக்கு அப்படி என்ன கோபமோ? வந்த வேலையைக் காட்டிலும்,  பெரிய காரியம் ஒன்றை அரங்கேற்றினர். 

 

tick tak  to a police station! Action Against Action!

 

சிறுத்தை என்ற திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிகர் கார்த்தி, கொடூர வில்லன் ஒருவனுடைய வீட்டு வாசல்படியில் கால் வைக்க முற்படும்போது,  “ராக்கெட்.. வாஸ்து பார்த்து வலது கால் எடுத்து வச்சு போறதுக்கு இது என்ன மாமியார் வீடா? எச்சக்கல.. கேப்மாரி.. மொள்ளமாரி.. முடிச்சவிக்கி வீடு இது.. இதுக்கெல்லாம் போடு லெஃப்ட் லெக்..” என்று வசனம் பேசி, இடது காலை ஸ்ட்ராங் ஆக எடுத்து வைப்பார்.  

 

tick tak  to a police station! Action Against Action!

 

இந்த இளைஞர்களுக்கு,  காவல் நிலையத்தைப் பலரும் மாமியார் வீட்டுக்கு ஒப்பிடுவது நினைவுக்கு வந்து தொலைத்திருக்கிறது. அதனால்,  டிக்டாக் செயலியில் உள்ள சிறுத்தை வசனத்துக்கேற்ப, சிவகாசி காவல் நிலைய வாசலில்  ‘ஆக்ஷன்’ காட்டியதோடு, சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டனர். காவல் நிலையம் என்பது மொள்ளமாரி.. கேப்மாரி.. முடிச்சவிக்கிகளின் வீடா? வந்ததே கோபம் போலீசார்களுக்கு. ஈஸ்வரன், சங்கரேஸ்வரன், முருகேசன், குருமதன் ஆகிய நான்கு இளைஞர்களின் மீது,  294(b), 504, 505, ITACT4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  

 

இன்றைய இளைஞர்களின் டிக்டாக் மோகமானது,  ‘ஆட்டைக் கடிச்சு.. மாட்டைக் கடிச்சு.. கடைசில மனுஷனைக் கடிச்ச கதையா..’ காவல் நிலையத்தைக் கிண்டல் பண்ணும் அளவுக்குத் துணிச்சலைத் தந்தது கொடுமைதான்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.