Skip to main content

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு, கமாண்டோ போலிஸார் சோதனையால் பரபரப்பு

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
Thyagaraja Temple, Tiruvarur


திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பரிவு காவல்துறையினரும் மற்றும் சென்னை கமாண்டோ பாதுகாப்பு பிரிவினரும் ஒரே நேரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

தமிழகம் முழுவதும் கோயில்களில் உள்ள சிலைகள் மாயமானதை குறித்தும் காப்பகத்தில் பாதுகாக்கப்படும் சிலைகள் குறித்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

கடந்த மாதம் தஞ்சை பெரிய கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டு கோயிலில் உள்ள சிலைகள் சரியாக உள்ளதாக என ஆய்வு மேற்கொண்டார் பொன்.மாணிக்கவேல். அப்போது திருவாரூர் தியாகராஜர் கோவிலில் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வேன் என கூறியிருந்தார். அதன்படியே செவ்வாய்க்கிழமை திருவாரூர் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தை பொன். மாணிக்கவேல் தலைமையிலான குழுவில் இடம்பெற்றுள்ள ஆய்வாளர் அண்ணாதுரை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
 

இந்த மையத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து சிலைகளும் சரியாக உள்ளதா என்பதை ஆய்வுசெய்ய முதற்கட்டமாக ஆய்வாளர் அண்ணாதுரை வந்துள்ளதாகவும் விரைவில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆய்வு செய்ய வருகை தரவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
 

அதில் ஒரு பகுதியாக சென்னை கமாண்டோ பாதுகாப்பு துறையினர் சார்பில் கோயிலின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வாளர் மாறன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் கோயிலின் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
 

தியாகராஜர் திருக்கோவிலில் திடீர் சோதனை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு கல்லூரி முதல்வர் மீது வழக்குப்பதிவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
case filed against suspended govt college principal

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தவர் கீதா. இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநராகவும் பொறுப்பு பதவி வகித்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதி மோசடி மற்றும் நிர்வாக சீர்கேடு காரணமாக எழுந்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருந்து கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் (01.02.2024) இவர் மீண்டும் கல்லூரியின் முதல்வராக பதவியேற்றார். அதே சமயம் தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் தனராஜன், திரு.வி.க. அரசு கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் முதல்வர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து தனராஜன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மோசடி புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருவிக கல்லூரி முதல்வர் கீதா மீது அரசு ஆவணங்களை கிழித்ததாகவும், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தஞ்சை மண்டல கல்லூரி இணை இயக்குநர் தனராஜன் புகார் தெரிவித்துள்ளார். இதனயடுத்து கீதா மீது 5 பிரிவுகளின் கீழ் திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story

வெடிக் கடையில் பட்டாசுகள் வெடித்து விபத்து

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

thiruvarur valanfgaimaan shop incident

 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் செந்தில் குமார் என்பவர் வெடிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக விற்பனைக்கு வைத்திருந்த வெடிகள் வெடித்து தீ மளமளவெனக் கடை முழுவதும் பரவியது. இதனால் கடையிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. மேலும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

 

இது குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதே சமயம் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வெடிக் கடைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.