Skip to main content

கோவில் திருவிழாவில் 7 பேரை பலி வாங்கிய பிடிக்காசு வதந்தீ!!!

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

கோவிலில் இருக்கும் சாமியை விட அவருக்கு பூஜை செய்யும் பூசாரியை தான் நம் மக்கள் அதிகம் நம்புகிறார்கள். அவர்களின் அதீத நம்பிக்கையும், அதோடு வதந்தியும் சேர்ந்து கொண்டால் பல நேரங்களில் மக்களின் வாழ்க்கையே இழக்க செய்கிறது என்பதற்கு துறையூர் கோவில் திருவிழா 7 பேரை பலி கொண்டதே உதாரணம்.
 

thuraiyur


திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ளது முத்தையம்பாளையம் கிராமம். இந்த கிராமத்தையொட்டிய காட்டுப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் வாழ வைக்கும் வண்டிதுறை கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை தனபால் என்பவர் தனிப்பட்ட முறையில் நடத்தி வருகிறார்.
 

இவருக்கு சொந்த ஊர் திருச்சி மண்ணச்சநல்லூர். இவருக்கு மகேஷ்வரி என்கிற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அடிப்படையில் டெய்லரான இவர் தனக்கு ஆசாத்திய சக்தி இருக்கிறது என்று குறி சொல்ல ஆரம்பித்து சின்ன அளவில் மண்ணச்சநல்லூரிலும், துறையூரிலும் ஆரம்பித்து கடந்த சில வருடங்களாக துறையூர் கோவிலை குடும்பமாக இந்த கோவிலை நடத்தும் இவர்கள்.  இவரே இந்த கோவிலின் பூசாரியாகவும் உள்ளார். ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பூசாரி தனபால் சிறப்பு பூஜைகள் நடத்தி பில்லி சூனியம், ஏவல், திருமண தடை, குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் தொடர்பாக பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவது வழக்கம்.
 

இவர் அருள்வாக்கு சொல்கிறார் எல்லாத்தையும் அப்படியே சொல்கிறார் என்கிற விஷயம் கொஞ்சம் கொஞ்சம் வெளியே தெரியவர கூட்டம் அந்த அமாவாசை அன்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது. இதனால் அந்த காட்டுப்பகுதியில் நடக்கும் திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெற்ற ஆரம்பித்தது.  இந்த திருவிழாக்காக திருச்சி, நாமக்கல், கரூர், விழுப்புரம், சேலம், கடலூர் என வடமாவட்டங்களில் இருந்து கூட்டம் அலை மோத ஆரம்பித்தது.

 

thuraiyur


வழக்கமாக கோவில்களில் சாமி கொண்டிருந்த மக்களுக்கு தீடீர் என இந்த கோவிலை நடத்தும் பூசாரி தனபால் பிடிக்காசு என்கிற பெயரில் சில்லரை காசுகளை வருகிற அனைத்து மக்களுக்கும் கொடுப்பார் அந்த பூசாரி கொடுக்கும் சில்லரை காசுகளை வாங்கி வீட்டில் கொண்டு போய் வைத்தால் செல்லம் செழிக்கும் என்று அவர் சொல்லும் வேத வாக்கு மக்களுக்கு பெரிய நம்பிக்கை ஏற்படுத்த ஆரம்பித்தது. அதனால் திருவிழாவில் இந்த பிடிக்காசு என்கிற திருவிழாவிற்கு கூட்டம் இலட்ச கணக்கில் கூட ஆரம்பித்தது.
 

இந்த பிடிக்காசு நம் வாழ்க்கையை வளமாக்கும் என்கிற நம்பிக்கையிருந்ததால் ஒவ்வொரு அமாவாசை பூஜையும் பிரபலமானது. இதனால் வெள்ளிக்கிழமை சித்ரா பவுர்ணமியன்று கருப்பு கோவிலில் பூசாரி தனபால் சிறப்பு பூஜைகள் நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக அங்கு கீற்றுகளினால் ஆன பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில் தங்கி இருந்த பக்தர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருந்து பக்தர்களுக்கு பிடிக்காசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் பூசாரியிடம் பிடிக்காசு வாங்குவதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர். சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆண்கள், பெண்கள் வரிசையில் நின்றனர்.
 

பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக சென்று பிடிக்காசு வாங்கி செல்வதற்கு வசதியாக ஒரு குறிப்பிட்ட பகுதி வரை சவுக்கு கட்டைகளால் தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இரும்பு குழாய்களால் ஆன ‘பேரிகாட்’களையும் போலீசார் அமைத்து இருந்தனர். ஆனால் பக்தர்கள் அதை எல்லாம் தாண்டி நீண்ட தூரம் வரை நின்று கொண்டிருந்தனர். பூசாரி தனபால் பக்தர்களுக்கு பிடிக்காசுகளை வழங்கி கொண்டிருந்தார்.

 

thuraiyur


காலை 9 மணி அளவில் பிடிக்காசு பெறுவதில் பக்தர்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதற்கு இடையே பூசாரி கொடுத்துக்கொண்டிருந்த பிடிக்காசு தீந்து போக போகிறதாம் என்கிற பேச்சு அங்கே வதந்தியாக கிளம்ப ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு முன்னே செல்ல முயன்றனர். வெளியே இருந்த சிலர் வரிசையை மீறி உள்ளே நுழைய ஆரம்பித்தனர். இதனால் அந்த பகுதியே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பக்தர்கள் கீழே விழுந்து விடவும். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் ‘பேரிகாட்’ ஒன்று சரிந்து விழுந்தது. அதற்கு அடியில் சிலர் சிக்கி அய்யோ அம்மா என அலறினர்.  பிடிக்சாசு தீர்ந்து போக போகிறது எப்படியும் வாங்கிவிடனும் என்கிற ஆர்வத்தில் ஆனால் அதனை பொருட்படுத்தாது பலர் முன்னே செல்ல முயன்றனர். இதனால் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். கீழே விழுந்தவர்களை மற்றவர்கள் மிதித்துக்கொண்டு சென்றனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் மாறியது. கூட்ட நெரிசலில் சிக்கியும், மூச்சு திணறியும் 4 பெண்கள் உள்பட 7 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
 

7 பேர் பலிக்கு பிறகு அங்கு வந்திருந்த பக்தர்கள் சிலர் கோவிலில் முறைப்படி அனுமதி பெற்று பிடிக்காசு வழங்கும் விழா நடத்தப்படவில்லை ஆயிரக்கணக்கானவர்கள் கூடி நின்ற இடத்தில் போலீசார் போதுமான அளவிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. இவ்வளவு கூட்டம் கூடும் என்று எதிர்பார்த்தும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் முறையான ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை என்று குற்றசாட்டு சொல்லி புலம்ப ஆரம்பித்தனர். 
 

இந்த பிடிக்காசு திருவிழாவிற்கு டி.எஸ்.பி. குணசேகரன் தலைமையில் துறையூர் இன்ஸ்பெக்டர் குமரகுரு மேற்பாறையில் 3 இன்ஸ்பெக்டர்கள் 16 சப் இன்ஸ்பெக்டர்கள் சுமார் 150 போலிசார் பாதுகாப்பு கொடுத்தனர் என்பது குறிப்பிடதக்கது.

 

thuraiyur


விபத்து நடந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மத்திய மண்டல ஐஜி வரதராஜீலு, மாவட்ட கண்காணிப்பாளர் ஜீயாவுதீன்வுல்ஹக், ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொன்னார்கள்.
 

இறந்து போன குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் மோடி கொடுத்த உதவி பணம் மட்டுமே மிச்சம். 7 பேர் பலி சம்பவத்தில் பூசாரி தனபால் மீது எதிபாரத நடந்த விபத்திற்கு காரணமாக இருத்தல் என்கிற பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  எதிர்கால வாழ்வை வளமாக்கும் என்று நம்பி சென்ற மக்களுக்கு எதிர்காலமே இழந்து நிற்கும் அந்த குடும்பத்திரை நினைக்கும் போது பரிதாபமாக தான் இருக்கிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.