Throwing liquor bottles on a moving train; Passengers fear

ஓடும் ரயில் மீது மது பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவம் சென்னையில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மறைமலைநகர் பகுதியில் ரயில் மீது மர்ம நபர்கள் மது பாட்டில் வீசியதாக பயணிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். எழும்பூரில் இருந்து புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்மநபர்கள் குடிபோதையில் மதுபாட்டில்களை வீசியதாக கூறப்படுகிறது. இதுபோன்று ரயில் மீது மது பாட்டில்கள் வீசப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக பயணிகள் குற்றச்சாட்டுகளை வைத்திருந்த நிலையில் இன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.