Skip to main content

அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல்

Published on 03/05/2018 | Edited on 03/05/2018
Thriparappu falls


குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த தனியார் குத்தகையை ரத்து செய்து அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
 

நாள் முமுவதும் தண்ணீா் கொட்டும் திற்பரப்பு அருவிக்கு கேரளா மற்றும் தமிழகத்ததின் பல பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் இங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.
 

             இந்த நிலையில் தனியார் குத்தகைதாரா் கிறிஸ்டோபா் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் 5 ரூபாய்க்கு பதில் 10 ரூபாயாகவும், 10 ரூபாய் காமிராவுக்கு 25 ரூபாயாகவும், 25 ரூபாய் வீடியோ காமிராவுக்கு 125 ரூபாய் என ரசீது திருத்தி கொடுத்து வசூலிப்பதாக சுற்றுலா பயணிகள் தரப்பில் புகார் கூறப்பட்டு வந்தது.

                இந்த நிலையில் திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலா் ரமாதேவி ஆய்வு மேற்கொண்டு அதிக நுழைவு கட்டணம் வசூலிப்பதை கண்டுபிடித்தார். இதை தொடா்ந்து குத்தகைதாரரின் குத்தகையை ரத்து செய்து இன்று முதல் பேரூராட்சி தீா்மானித்த குறைந்த கட்டணத்தை பேரூராட்சி ஊழியா்கள் மூலம் வசூலிக்கபடும் என்று செயல் அலுவலா் ரமாதேவி தெரிவித்துள்ளார்.  இதை தொடா்ந்து சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

அபாயத்தில் நின்று ரீல்ஸுக்கு போஸ் கொடுத்த இளைஞர்; கால் இடறி அருவியில் விழும் பகீர் காட்சி

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

A young man posed for reels standing in peril; The scene of Bhakeer tripping and falling into the waterfall

 

கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்போது பலத்த மழை பெய்து வரும் நிலையில், காவிரி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், சரத் என்ற இளைஞர் சமூகவலைத்தளத்தில் பதிவிட ரீல்ஸ் செய்வதற்காக அருவியை ஒட்டி இருந்த பாறையில் நின்று கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய நண்பர் கரைப்பகுதியில் இருந்து அதை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த நிலையில், திடீரென கால் இடறி அருவியில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டார்.

 

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. உடனடியாக மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சரத்தின் உடலைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளப்பெருக்கு காலங்களில் நீர் நிலைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனப் பலமுறை அறிவுறுத்தல் கொடுக்கப்பட்ட நிலையிலும் ரீல்ஸ் எடுப்பது, செல்ஃபி எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், இளைஞர் ஒருவர் அருவியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

பிடிபட்ட அரிசி கொம்பன்; மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

arisi komban elephant happy theni kambam suruli tourist

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அரிசி கொம்பன் வனத்துறையினருக்குப் போக்கு காட்டி வந்தது. இதையடுத்து மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து யானையானது கம்பம் அருகே உள்ள சண்முகா அணைப் பகுதியில் புகுந்து முகாமிட்டு வந்தது.

 

இதையடுத்து அரிசி கொம்பன் யானையின் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளதால் கடந்த 28 ஆம் தேதி முதல் தேனி மாவட்டம் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வனத்துறையின் தொடர் முயற்சியின் பலனாக மயக்க ஊசி செலுத்தப்பட்டு அரசி கொம்பன் யானை பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. இதையடுத்து 10 நாட்களுக்குப் பின்னர் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கி கம்பம் வனத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.