Skip to main content

பைக்பெட்டியை திறக்க முயன்ற மூவர்- நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர்!

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

The three who tried to open the bike box were arrested

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது கீழக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(56). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பால் நிறுவனத்திற்குச் சுற்றுப்பட்டு கிராமங்களில் உள்ள பசு மாடு வளர்ப்போர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யும் பணியைச் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பால் உற்பத்தியாளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதற்காக வேப்பூர் அருகே உள்ள கழுகுதூரில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் இருந்து 45,000 ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். அதைத் தனது இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்துக் கொண்டு அங்கிருந்து வேப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

 

வேப்பூர் பஸ் நிலையம் எதிரே வந்த போது அவரது இரு சக்கர வாகன டயர் பஞ்சரானது. இதையடுத்து பஞ்சர் ஒட்டுவதற்காக அருகிலுள்ள பஞ்சர் கடைக்கு வாகனத்தைக் கொண்டு சென்று நிறுத்தினார். பஞ்சர் ஒட்டி முடிப்பதற்குள் டீ குடித்து விட்டு வரலாம் என்று கிளம்பிய வெங்கடேசன் சமயோசிதமாக பைக் பெட்டியில் வைத்திருந்த 45000 பணத்தை கையோடு எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். பின்னர் அருகில் இருந்த டீ கடைக்குச் சென்று டீ குடித்து விட்டுச் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தார். அப்போது அவரது பைக்பெட்டியை கள்ளச்சாவிப் போட்டு மூன்று இளைஞர்கள் திறந்து கொண்டிருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் சத்தம் போடாமல் நைசாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியோடு அந்த மூன்று இளைஞர்களை வளைத்துப் பிடித்து வேப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

 

போலீஸ் விசாரணையில் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் சேர்ந்த செந்தில்குமார்(35), பாரதிராஜா(26), சேலம் மாவட்டம் கிச்சிப் பாளையத்தை சேர்ந்த சித்து ராஜா(26) என தெரியவந்தது. மேலும் இந்த மூன்று பேரும் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து போது கையும் களவுமாக பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.