Skip to main content

"ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

farmers electricity april 1fst cm edappadi palaniswami announced

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் உபரிநீரை 100 வறண்ட ஏரிகளுக்கு கொண்டு செல்லும் மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டத்தை திப்பம்பட்டியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூபாய் 565 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட, இந்தத் திட்டத்தின் மூலம் மேட்டூர் அணையின் உபரிநீர் மேட்டூர், ஓமலூர், சங்ககிரி மற்றும் எடப்பாடி தொகுதியிலுள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு அனுப்பப்படும். இதனால் 4,238 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் ரூபாய் 5.36 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

 

விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "மேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்திற்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு நன்றி. மிகப்பெரிய திட்டத்தை வேகமாக செயல்படுத்தி நிறைவேற்றிய நிறுவனத்திற்கும் நன்றி. விவசாயிகளின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அரசாக அ.தி.மு.க. அரசு என்றும் செயல்படும். ஐந்து ஆண்டுகளில் இரண்டுமுறை விவசாயிகளின் கடனை ரத்து செய்து சாதனை படைத்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசு. விவசாயிகள் பாதிக்கப்படும் போதெல்லாம் அவர்களைக் கைதூக்கி ஏற்றிவிடும் அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். குறுகிய காலத்தில் விவசாயிகளுக்காக மேட்டூர் - சரபங்கா உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது" என்றார். 

 

அதைத் தொடர்ந்து, முதல் ஏரியான எம்.காளிப்பட்டி ஏரிக்கு வந்த மேட்டூர் அணை நீரை மலர்தூவி முதல்வர் வரவேற்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.