Skip to main content

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மர்ம மரணம் 

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Three members of the same family passes away mysteriously

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள காடியார் கிராமத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகிய மூன்று பேர்களும் தங்களுக்கு சொந்தமான கரும்பு வயலில் உடல் அழுகிய நிலையில் கண்டடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

காடியார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(60). இவரது மனைவி அன்னபூரணி(52). இவர்களுக்கு சந்தோஷ்குமார், ராஜேஷ் குமார் என இரண்டு மகன்கள். இதில் ராஜேஷ் குமார் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். சந்தோஷ் குமார் திருக்கோவிலூரில் உள்ள ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதோடு அவ்வப்போது தாய் தந்தையுடன் விவசாய வேலைகளையும் செய்து வந்துள்ளார். 

ராஜேஷ் குமார், பெங்களூரில் இருந்து தினசரி தனது தாய், தந்தை, சகோதரர் ஆகிய மூவரிடமும் செல்போனில் பேசுவார். அதன்படி சில தினங்களுக்கு முன்பு தாய், தந்தைக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் யாரும் ஃபோனை எடுக்காததால் தனது சகோதரர் சந்தோஷ் குமாரை தொடர்புக்கொள்ள, அவரும் தொடர்பில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஷ்குமார், அதே பகுதியில் உள்ள தனது உறவினர்களுக்கு ஃபோன் மூலம் பேசி தனது குடும்பத்தினரிடம் பேசிவிட்டு தனக்கு தகவல் தருமாறு கூறியுள்ளார்.

ராதாகிருஷ்ணனுக்கு காடியார் கிராமத்தில் ஒரு வீடும், திருக்கோவிலூர் அருகே சந்தைப்பேட்டை பகுதியில் ஒரு வீடும் உள்ளது. அவரது உறவினர்கள் அதன்படி காடியார் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. தொடர்ந்து அவர்கள் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கும் வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், மீண்டும் காடியார் கிராமத்திற்கு வந்து ராதாகிருஷ்ணனனுக்கு சொந்தமான கரும்பு வயல் பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். 

அங்கே சந்தோஷ் குமார் பயன்படுத்தும் இரு சக்கர வாகனம் கிடந்துள்ளது. அதேபோல் அவர்கள் அணிந்திருந்த செருப்புகள் கிடந்துள்ளன. மேலும் கரும்பு பயிருக்கு தெளிக்கும் தேவையான உரம், பூச்சி மருந்து ஆகியவை அங்கே சிதறி கிடந்துள்ளன. இதனால் மேலும் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கரும்பு வயலுக்கு உள்ளே சென்று தேடி பார்த்துள்ளனர். அங்கே ராதாகிருஷ்ணன், சந்தோஷ் குமார் ஆகியோர் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். மேலும், சற்று தள்ளி அன்னபூரணி உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளார். மூவரும் கரும்புத் தோட்டத்தில் உடல் அழகிய நிலையில் கிடந்ததை பார்த்து அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். டி.எஸ்.பி. மனோஜ் குமார் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராதாகிருஷ்ணன் உட்பட மூவரும் கரும்பு வயலில் இறந்து கிடந்தது எப்படி, இது தற்கொலையா அல்லது முன் விரோதத்தில் அவர்கள் மூவரையும் யாராவது கொலை செய்துள்ளனரா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். 

இறந்த சந்தோஷ் குமாருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. தற்போது அவரது மனைவி தன் குழந்தையோடு தனது தாய் வீட்டில் வசித்துவருவது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.