Skip to main content

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை...! கார் டிரைவர் கைது..!

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

three members passes away one family car driver arrested

 

சென்னை படப்பை அடுத்துள்ள நரியம்பாக்கத்தை சேர்ந்தவர் மூங்கிலான் இவரது மனைவி பத்மினி. இவர்களுக்கு செந்தில்குமார் ராஜ்குமார் என இரு மகன்கள் உள்ளனர். செந்தில்குமார் அரசு ஒப்பந்ததாரராக கட்டுமான பணிகளை எடுத்து செய்து வருகிறார். இவருக்கும் இவரது தம்பி ராஜ்குமாருக்கும்  தந்தை மூங்கிலான் சொத்துக்களை பாகம் பிரித்துக் கொடுத்துள்ளார். இதில் ராஜ்குமாருக்கு அதிக மதிப்புள்ள சொத்துக்கள் கொடுத்துள்ளது கண்டு செந்தில்குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார். 


இதுகுறித்து தன்னிடம் கார் டிரைவராக வேலை பார்த்துவந்த ராஜேஷ் கண்ணன் என்பவருடன் ஆலோசனை செய்துள்ளார். செந்தில்குமார், கார் டிரைவர் ராஜேஷ் கண்ணன் சேர்ந்து தனது தம்பி ராஜ்குமாரை கொலை செய்துள்ளனர். இந்தக் கொலை வழக்கில் செந்தில்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில்குமார் சிறையில் இருந்தபோது செந்தில்குமாரின் மனைவி மேனகாவுக்கும் கார் டிரைவர் ராஜேஷ்கண்ணனுக்கும் முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. 


இந்தத் தகவல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்த செந்தில்குமாருக்கு தெரியவந்தது. இதனால் மனைவி மேனகாவுக்கும் செந்தில்குமாருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் கார் டிரைவர் ராஜேஷ் கண்ணன் மேனகாவின் தந்தை அருண் ஆகியோர் சேர்ந்து செந்தில்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். 


அதன்படி கடந்து 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேளாங்கண்ணியில் தங்கியிருந்த செந்தில்குமாரிடம் தங்கள் குடும்ப பிரச்சனை சம்பந்தமாக சமாதானம் பேச வேண்டும் என்று அவரது மாமனார் அருண் மற்றும் ராஜேஷ் கண்ணன் இவரது நண்பர் விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து செஞ்சியை அடுத்துள்ள ஆலம்பூண்டி அருகில் உள்ள பசுமலை தாங்கலில் உள்ள அருணின் விவசாய நிலத்திற்கு செந்தில் குமாரை வரவழைத்துள்ளனர்.
 

அவரிடம்  சமாதானம் பேசுவது போன்று நடித்து செந்தில்குமாரை கொலை செய்துள்ளனர். அவரது உடலை அங்கேயே நிலத்தில் புதைத்துள்ளனர். செந்தில்குமாரின் உடலை புதைப்பதற்கு ஹரி கிருஷ்ணன் மற்றும் சவுட்டூர் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் ஆகியோர் உதவி செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு செந்தில் குமாரின் தந்தை மூங்கிலான் சொத்துக்காக தனது மனைவி பத்மினியை 2018 ஆம் ஆண்டே கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து  மூன்று நாட்களில்  பத்மினியை மீட்டுள்ளனர். இதையடுத்து அதே ஆண்டு தனது மருமகளும் செந்தில்குமாரின் மனைவியுமான மேனாகவையும் மூங்கிலான் அயனாவரத்தில் வைத்து கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து அப்போது அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேனகாவையும் மீட்டுள்ளனர். 
 

இந்த நிலையில் மேனகாவை கடத்திய மூங்கிலான் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த ராஜேஷ் கண்ணன், மூங்கிலானை கடந்த 2018ம் ஆண்டே கொலை செய்துள்ளார்.  இந்தநிலையில் பத்மினி கடத்தல் வழக்கில் ராஜேஷ் கன்னாவை போலீசார் சேர்த்துள்ளனர். இதில் ராஜேஷ் கன்னாவை போலீசார் கைது செய்தனர். செந்தில்குமாரின் தாயார் பத்மினி தனது மகன் செந்தில்குமாரை காணவில்லை என்று ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். 


செந்தில்குமார் காணாமல்போன விஷயத்தில்  கார் டிரைவர்  ராஜேஷ் கண்ணனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. காவல்துறையினர் ராஜேஷ் கண்ணனை  விசாரணை செய்ததில் செந்தில்குமார் மற்றும் அவரது தந்தை மூங்கிலானையும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து ராஜேஷ் கண்ணா செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் காவல்துறை உதவியுடன் செஞ்சி தாசில்தார் ராஜன் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பசுமலை கிராமத்தில் உள்ள அருணின் விவசாயி நிலத்தில் செந்தில்குமார் சடலத்தை தோண்டி எடுத்தனர். இந்த கொலைக்கு உதவியாக இருந்த ஹரி கிருஷ்ணன், செந்தில்குமார் உடலை புதைக்க பள்ளம் தோண்டிய காசிநாதன் மற்றும் ஆலம்பூண்டி அருள் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். முறையற்ற உறவுக்காகவும் சொத்துக்காகவும் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 3 பேர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.