Skip to main content

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை...! கார் டிரைவர் கைது..!

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

three members passes away one family car driver arrested

 

சென்னை படப்பை அடுத்துள்ள நரியம்பாக்கத்தை சேர்ந்தவர் மூங்கிலான் இவரது மனைவி பத்மினி. இவர்களுக்கு செந்தில்குமார் ராஜ்குமார் என இரு மகன்கள் உள்ளனர். செந்தில்குமார் அரசு ஒப்பந்ததாரராக கட்டுமான பணிகளை எடுத்து செய்து வருகிறார். இவருக்கும் இவரது தம்பி ராஜ்குமாருக்கும்  தந்தை மூங்கிலான் சொத்துக்களை பாகம் பிரித்துக் கொடுத்துள்ளார். இதில் ராஜ்குமாருக்கு அதிக மதிப்புள்ள சொத்துக்கள் கொடுத்துள்ளது கண்டு செந்தில்குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார். 


இதுகுறித்து தன்னிடம் கார் டிரைவராக வேலை பார்த்துவந்த ராஜேஷ் கண்ணன் என்பவருடன் ஆலோசனை செய்துள்ளார். செந்தில்குமார், கார் டிரைவர் ராஜேஷ் கண்ணன் சேர்ந்து தனது தம்பி ராஜ்குமாரை கொலை செய்துள்ளனர். இந்தக் கொலை வழக்கில் செந்தில்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில்குமார் சிறையில் இருந்தபோது செந்தில்குமாரின் மனைவி மேனகாவுக்கும் கார் டிரைவர் ராஜேஷ்கண்ணனுக்கும் முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. 


இந்தத் தகவல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்த செந்தில்குமாருக்கு தெரியவந்தது. இதனால் மனைவி மேனகாவுக்கும் செந்தில்குமாருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் கார் டிரைவர் ராஜேஷ் கண்ணன் மேனகாவின் தந்தை அருண் ஆகியோர் சேர்ந்து செந்தில்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். 


அதன்படி கடந்து 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேளாங்கண்ணியில் தங்கியிருந்த செந்தில்குமாரிடம் தங்கள் குடும்ப பிரச்சனை சம்பந்தமாக சமாதானம் பேச வேண்டும் என்று அவரது மாமனார் அருண் மற்றும் ராஜேஷ் கண்ணன் இவரது நண்பர் விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து செஞ்சியை அடுத்துள்ள ஆலம்பூண்டி அருகில் உள்ள பசுமலை தாங்கலில் உள்ள அருணின் விவசாய நிலத்திற்கு செந்தில் குமாரை வரவழைத்துள்ளனர்.
 

அவரிடம்  சமாதானம் பேசுவது போன்று நடித்து செந்தில்குமாரை கொலை செய்துள்ளனர். அவரது உடலை அங்கேயே நிலத்தில் புதைத்துள்ளனர். செந்தில்குமாரின் உடலை புதைப்பதற்கு ஹரி கிருஷ்ணன் மற்றும் சவுட்டூர் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் ஆகியோர் உதவி செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு செந்தில் குமாரின் தந்தை மூங்கிலான் சொத்துக்காக தனது மனைவி பத்மினியை 2018 ஆம் ஆண்டே கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து  மூன்று நாட்களில்  பத்மினியை மீட்டுள்ளனர். இதையடுத்து அதே ஆண்டு தனது மருமகளும் செந்தில்குமாரின் மனைவியுமான மேனாகவையும் மூங்கிலான் அயனாவரத்தில் வைத்து கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து அப்போது அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேனகாவையும் மீட்டுள்ளனர். 
 

இந்த நிலையில் மேனகாவை கடத்திய மூங்கிலான் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த ராஜேஷ் கண்ணன், மூங்கிலானை கடந்த 2018ம் ஆண்டே கொலை செய்துள்ளார்.  இந்தநிலையில் பத்மினி கடத்தல் வழக்கில் ராஜேஷ் கன்னாவை போலீசார் சேர்த்துள்ளனர். இதில் ராஜேஷ் கன்னாவை போலீசார் கைது செய்தனர். செந்தில்குமாரின் தாயார் பத்மினி தனது மகன் செந்தில்குமாரை காணவில்லை என்று ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். 


செந்தில்குமார் காணாமல்போன விஷயத்தில்  கார் டிரைவர்  ராஜேஷ் கண்ணனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. காவல்துறையினர் ராஜேஷ் கண்ணனை  விசாரணை செய்ததில் செந்தில்குமார் மற்றும் அவரது தந்தை மூங்கிலானையும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து ராஜேஷ் கண்ணா செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் காவல்துறை உதவியுடன் செஞ்சி தாசில்தார் ராஜன் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பசுமலை கிராமத்தில் உள்ள அருணின் விவசாயி நிலத்தில் செந்தில்குமார் சடலத்தை தோண்டி எடுத்தனர். இந்த கொலைக்கு உதவியாக இருந்த ஹரி கிருஷ்ணன், செந்தில்குமார் உடலை புதைக்க பள்ளம் தோண்டிய காசிநாதன் மற்றும் ஆலம்பூண்டி அருள் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். முறையற்ற உறவுக்காகவும் சொத்துக்காகவும் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 3 பேர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.