
தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் பகுதியில் முகாம்மிட்டுள்ள அரிக்கொம்பன்யானை பிடிப்பதற்கு வனத்துறையினரும் போலீசாரம் தீவிர தேடுதலை வேட்டையில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு கம்பம் நகர் பகுதியில் முகாமிட்டிருந்த அரிசி கொம்பன் அதிகாலையில் சுருளிப்பட்டி வழியாக சுருளிமலைப் பகுதிக்கு சென்று தற்பொழுது மேகமலை சென்றதாக தெரிய வருகிறது.
இந்தநிலையில் கம்பத்துக்கு வந்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்த லைவர் ஷஜீவனா உள்பட வனத்துறை அதிகாரிகளுடன் அரிக்கொம்பன் பிடிப்பதற்கு ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்கள் மத்தியில் அமைச்சர் மதிவேந்திரன் பேசும்போது, அரிக்கொம்பன் என்ற அரிசிக்கொம்பன் என்னும் யானை கிட்டதட்ட 35 வயது மிக்க ஆண் யானை. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கேரள மாநில வனத்துறையினரால் பிடிப்பட்டு, முல்லைக் கொடி பகுதிக்குட்பட்ட பெரியார் புலிகள் வனப்பகுதியில் 29.04.2023 அன்று விடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, யானை வண்ணாத்திப்பாறை வனப்பகுதியான தேனி மாவட்டம், மேலக்கூடலூர் கிராமப்பகுதிக்கு 30.04.2023 அன்று வந்துள்ளது.
மேலும், ஹைவேவிஸ் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் யானை வருகை தந்துள்ளது. அதனைத்தொடாந்து 26.05.2023 அன்று தேனி மாவட்டம், குமுளி பகுதியில் சுரங்கணாறு தனியாருக்கு சொந்த மான ஒரு விளைநில பகுதியில் 27.05.2023 அன்று சுமார் மாலை 4.00 மணி அளவில் யானை காணப்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு சில நபர்களால் யானைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து, கெஞ்சிகவுண்டன் குளம் மின்சார வாரிய துணை நிலையத்திற்கு அருகில் யானை இருப்பதை கண்டறிந்த வனத்துறை அலுவலர்கள், மாவட்ட நிர்வாக அலுவலர்கள் மற்றும் காவல் துறையை சார்ந்தவர்கள் யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்ட போது, ட்ரோன் கேமிரா மூலம் ஒரு நபர் ஒளிப்பதிவு செய்ததன் மூலம் யானைக்கு இடையூறு ஏற்பட்டு, காந்திநகரில் இருக்க கூடிய கம்பம் - குமுளி புறவழிச் சா லை வாழை தோட்டத்தில் இருந்துள்ளது.
ஒவ்வொரு இடத்திலும் ஏற்பட்ட இடையூறுகளால் யானை பயத்திற் குட்பட்டு ஒவ்வொரு இடத்திலிருந்து மாறி, மாறி பயணம் செய்து வந்துள்ளது. எதிர்பாரத விதமாக கம்பம் நகர்பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களுக்கு சில இடையூறுகளை ஏற்படுத்திவுள்ளது. இதனை அறிந்த, மாவட்ட நிர்வாகம், வனத்துறை, கவால்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, நகர்பகுதியிலிருந்து யானை வெளியேற்றப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக யானையை பாதுகாப்பாக பிடிப்பதற்கு பல்வேறு குழுக்கள் தேனி மாவட்டத்திற்கு வருகை தந்து, திறம்பட செயல்பட்டு கொண்டிருக்கிறது. பொதுமக்கள் வெளியே செல்லும் யானையினால் ஏதவாது தருணத்தில் பாதிப்பு ஏற்படாக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு பொது மக்கள் மற்றும் யானையை பாதுகாத்திடும் பொருட்டு ஒரு அமைதியான நிலை மையை கொண்டு வந்துயானையை பிடிப்பதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யானையை பிடிப் பதற்கு பல்வேறு குழுக்கள் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர், குறிப்பாக வனத்துறைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இரவு, பகல் பாராமல் யானையை பிடிப்பது அல்லது வனப்பகுதியில் விடுத்வத ற்கான அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது, யானை கூத்தநாட்சி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, வானொலி கழுத்துப் பட்டை கருவி யானைக்கு பொருத்தப்பட்டு யானை எங்கே இருக்கிறது என்பதனை ரேடியோ ரிசீவர் மூலம் யானை எங்கு இருக்கிறது எங்கு செல்கிறது என்பதனை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானை எப்போது கேரள மாநிலத்திலிருந்து பெரியார் புலிகள் வனப்பகுதியில் எப்போது விடப்பட்டதோ அப்போதிருந்தே தொடர்ந்து நமது தமிழ்நாடு வனத்துறையினரால் தொடர்ந்து யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் குறிப்பாக நகர் பகுதிக்குள் யானை வருகின்றபோது தகவல்கள் சரிவர கிடைக்க இயலாது. மீதமுள்ள இடங்களில் யானை எங்கு செல்கின்ற தகவல் தொடர்ந்து தகவல் கிடைத்து கொண்டிருக்கும். பொதுமக்களால் ஏற்படும் இடையூறுகளால் யானையின் அச்சத்தின் காரணமாக தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டி சிலவற்றை சேதபடுத்துகின்ற சூழ்நிலை ஏற்படுத்துகின்றது. இதனால் யானையை அமைதிப்படுத்தி பிடிப்பதற்கு நடவடிக்கைகளும் மேற் கொள்ளபட்டு வருகிறது. டாட்டிங் கன்ஸ் பயன்படுத்தக் கூடிய 5 பேர் சார்ந்த பிரகாஷ் என்பவர் தலைமையில் மருத்துவக் குழுவினர்கள் வரவழைக்கப்பட்டு, யானை பிடிக்க கூடிய ஒரு சூழலில் டாட்டிங் கன்ஸை பயன்படுத்தி, யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. மேலும், மூன்று கும்கி யானைகள் மாவட்டத்திற்கு யானையை பிடிப்பதற்கு வரவழைக்கப்பட்டு, தற்போது இரண்டு கும்கி யானைகள் வருகை தந்துள்ளது.
இன்னொரு யானையும் வந்து கொண்டிருக்கிறது. டாட்டிங் கன்ஸை பயன்படுத்தி யானையை மயக்க நிலையில் பிடித்தாலும் கும்கி யானைகளை பயன்படுத்தி அதனை வாகனத்தில் ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானையினை பிடிப்பது மிகவும் சவலான விஷயம், யானையை பாதுகாப்பாக பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீண்டும் நகர்ப்பகுதிக்குள் யானை வரதாவண்ணம் மருத்துவக்குழு வனத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள், சிறப்பு யானை கண்காணிப்பாளர்கள், காவல்துறையினர், மாவட்ட நிர்வாகமும் மக்களிடமி ருந்து யானைக்கும், யானையி டமிருந்து மக்களுக்கும் எந்த பாதிப்பு ஏற்பாடாத வகையில், இரவு பகலாக சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். நேற்றைய தினம் கூட யானை சந்தைப்பகுதியில் செலக்ககூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனை கவால் துறையினர் துரிதமாக செயல்பட்டு யானையினை திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். பொதுமக்களின் நலன் கருதி தேவைக்கேற்ப 144 தடை உத்தரவு வழங்கிட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே யானையை பாதுகாப்பாக பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும்'' என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)