Skip to main content

'அரிக்கொம்பனை பிடிக்க மூன்று கும்கி'- அமைச்சர் மதிவேந்தன் பேட்டி

Published on 28/05/2023 | Edited on 28/05/2023

 

bb

 

தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் பகுதியில் முகாம்மிட்டுள்ள அரிக்கொம்பன்யானை பிடிப்பதற்கு வனத்துறையினரும் போலீசாரம் தீவிர தேடுதலை வேட்டையில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு கம்பம் நகர் பகுதியில் முகாமிட்டிருந்த அரிசி கொம்பன் அதிகாலையில் சுருளிப்பட்டி வழியாக சுருளிமலைப் பகுதிக்கு சென்று தற்பொழுது மேகமலை சென்றதாக தெரிய வருகிறது.

 

இந்தநிலையில் கம்பத்துக்கு வந்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்த லைவர் ஷஜீவனா உள்பட வனத்துறை அதிகாரிகளுடன் அரிக்கொம்பன் பிடிப்பதற்கு ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்கள் மத்தியில் அமைச்சர் மதிவேந்திரன் பேசும்போது,  அரிக்கொம்பன் என்ற அரிசிக்கொம்பன் என்னும் யானை கிட்டதட்ட 35 வயது மிக்க ஆண் யானை. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கேரள மாநில வனத்துறையினரால் பிடிப்பட்டு, முல்லைக் கொடி பகுதிக்குட்பட்ட பெரியார் புலிகள் வனப்பகுதியில் 29.04.2023 அன்று விடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, யானை வண்ணாத்திப்பாறை வனப்பகுதியான தேனி மாவட்டம், மேலக்கூடலூர் கிராமப்பகுதிக்கு 30.04.2023 அன்று வந்துள்ளது.

 

மேலும், ஹைவேவிஸ் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் யானை வருகை தந்துள்ளது. அதனைத்தொடாந்து 26.05.2023 அன்று தேனி மாவட்டம், குமுளி பகுதியில் சுரங்கணாறு தனியாருக்கு சொந்த மான ஒரு விளைநில பகுதியில் 27.05.2023 அன்று சுமார் மாலை 4.00 மணி அளவில் யானை காணப்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு சில நபர்களால் யானைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து, கெஞ்சிகவுண்டன் குளம் மின்சார வாரிய துணை நிலையத்திற்கு அருகில் யானை இருப்பதை கண்டறிந்த வனத்துறை அலுவலர்கள், மாவட்ட நிர்வாக அலுவலர்கள் மற்றும் காவல் துறையை சார்ந்தவர்கள் யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்ட போது, ட்ரோன் கேமிரா மூலம் ஒரு நபர் ஒளிப்பதிவு செய்ததன் மூலம் யானைக்கு இடையூறு ஏற்பட்டு, காந்திநகரில் இருக்க கூடிய கம்பம் - குமுளி புறவழிச் சா லை வாழை தோட்டத்தில் இருந்துள்ளது.

 

ஒவ்வொரு இடத்திலும் ஏற்பட்ட இடையூறுகளால் யானை பயத்திற் குட்பட்டு ஒவ்வொரு இடத்திலிருந்து மாறி, மாறி பயணம் செய்து வந்துள்ளது. எதிர்பாரத விதமாக கம்பம் நகர்பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களுக்கு சில இடையூறுகளை ஏற்படுத்திவுள்ளது. இதனை அறிந்த, மாவட்ட நிர்வாகம், வனத்துறை, கவால்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, நகர்பகுதியிலிருந்து யானை வெளியேற்றப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

குறிப்பாக யானையை பாதுகாப்பாக பிடிப்பதற்கு பல்வேறு குழுக்கள் தேனி மாவட்டத்திற்கு வருகை தந்து, திறம்பட செயல்பட்டு கொண்டிருக்கிறது. பொதுமக்கள் வெளியே செல்லும் யானையினால் ஏதவாது தருணத்தில்  பாதிப்பு ஏற்படாக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு பொது மக்கள் மற்றும் யானையை பாதுகாத்திடும் பொருட்டு ஒரு அமைதியான நிலை மையை கொண்டு வந்துயானையை பிடிப்பதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யானையை பிடிப் பதற்கு பல்வேறு குழுக்கள் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர், குறிப்பாக வனத்துறைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இரவு, பகல் பாராமல் யானையை பிடிப்பது அல்லது வனப்பகுதியில் விடுத்வத ற்கான அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

தற்போது, யானை கூத்தநாட்சி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, வானொலி கழுத்துப் பட்டை கருவி யானைக்கு பொருத்தப்பட்டு யானை எங்கே இருக்கிறது என்பதனை ரேடியோ ரிசீவர் மூலம் யானை எங்கு இருக்கிறது எங்கு செல்கிறது என்பதனை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானை எப்போது கேரள மாநிலத்திலிருந்து பெரியார் புலிகள் வனப்பகுதியில்  எப்போது விடப்பட்டதோ அப்போதிருந்தே தொடர்ந்து நமது தமிழ்நாடு வனத்துறையினரால் தொடர்ந்து யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் குறிப்பாக நகர் பகுதிக்குள் யானை வருகின்றபோது தகவல்கள் சரிவர கிடைக்க இயலாது. மீதமுள்ள இடங்களில் யானை எங்கு செல்கின்ற தகவல் தொடர்ந்து தகவல் கிடைத்து கொண்டிருக்கும். பொதுமக்களால் ஏற்படும் இடையூறுகளால் யானையின் அச்சத்தின் காரணமாக தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டி சிலவற்றை சேதபடுத்துகின்ற சூழ்நிலை ஏற்படுத்துகின்றது. இதனால் யானையை அமைதிப்படுத்தி பிடிப்பதற்கு நடவடிக்கைகளும் மேற் கொள்ளபட்டு வருகிறது.  டாட்டிங் கன்ஸ் பயன்படுத்தக் கூடிய 5 பேர் சார்ந்த பிரகாஷ் என்பவர் தலைமையில் மருத்துவக் குழுவினர்கள் வரவழைக்கப்பட்டு, யானை பிடிக்க கூடிய ஒரு சூழலில் டாட்டிங் கன்ஸை பயன்படுத்தி, யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. மேலும், மூன்று கும்கி யானைகள் மாவட்டத்திற்கு யானையை பிடிப்பதற்கு வரவழைக்கப்பட்டு, தற்போது இரண்டு கும்கி யானைகள் வருகை தந்துள்ளது.

 

இன்னொரு யானையும் வந்து கொண்டிருக்கிறது. டாட்டிங் கன்ஸை பயன்படுத்தி யானையை மயக்க நிலையில் பிடித்தாலும் கும்கி யானைகளை பயன்படுத்தி அதனை வாகனத்தில் ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானையினை பிடிப்பது மிகவும் சவலான விஷயம், யானையை பாதுகாப்பாக பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

மீண்டும் நகர்ப்பகுதிக்குள் யானை வரதாவண்ணம் மருத்துவக்குழு வனத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள், சிறப்பு யானை கண்காணிப்பாளர்கள், காவல்துறையினர், மாவட்ட நிர்வாகமும் மக்களிடமி ருந்து யானைக்கும், யானையி டமிருந்து மக்களுக்கும் எந்த பாதிப்பு ஏற்பாடாத வகையில், இரவு பகலாக சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். நேற்றைய தினம் கூட யானை சந்தைப்பகுதியில் செலக்ககூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனை கவால் துறையினர் துரிதமாக செயல்பட்டு யானையினை திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். பொதுமக்களின் நலன் கருதி தேவைக்கேற்ப 144 தடை உத்தரவு வழங்கிட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே யானையை பாதுகாப்பாக பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும்'' என்று கூறினார்.
                       

சார்ந்த செய்திகள்

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

'இரவில் வெளியே வர வேண்டாம்'-அரியலூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 'Don't come out at night'-Admonition to people of Ariyalur

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ரஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனத்துறை மருத்துவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் சிறுத்தை, எலி, தவளை, நத்தை, மான், மயில் உள்ளிட்ட பறவைகளை  உண்ணக்கூடியது. இந்த நடமாடும் சிறுத்தைக்கு மற்ற உயிரினங்களைத் தாக்கும் எண்ணம் இல்லை. வளர்ப்பு பிராணிகளைச் சீண்டாத சிறுத்தை மனிதர்களிடம் பயந்த சுபாவம் கொண்டிருக்கும். அரியலூரில் நடமாடும் சிறுத்தை ஏலகிரி மலைக்கோ அல்லது அருகில் உள்ள பச்சை மலைக்கோ செல்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.