Advertisment

ஆற்றில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு!

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே ஆற்றல் தவறி விழுந்த மூன்று சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளமான கொடைக்கானல் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த கனகரத்தினம் மகன்களான தனஷ் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். அதுபோல் ஜெகதீஷ் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான. அதே பகுதியை சேர்ந்த குழந்தைராஜ் மகனான லூயிஸ்ஆனந்தராஜ் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான்.

Advertisment

 Three boys die in river

 Three boys die in river

 Three boys die in river

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்த மூன்று சிறுவர்களும் நண்பர்கள் என்பதால் அதேபகுதியை சேர்ந்தசிறுவர்களை அழைத்துக்கொண்டு குறிஞ்சிநகர் அருகில் மணியாறு கெஜம் என அழைக்கப்படும் பள்ளத்தாக்கு ஆற்று அருகே விளையாண்டு கொண்டிருந்தனர்.

அப்பொழுது கிரிக்கெட் பந்து பள்ளத்தாக்கு ஆற்றில் விழுந்தது அதை எடுக்க ஜெகதீஷ் சென்றபோது தவறி ஆற்றில் விழுந்தான். அவனைகாப்பாற்ற சென்ற தனஷ் மற்றும் லூயிஸ் ஆனந்தராசும் ஆற்று தண்ணீரில் சிக்கி மூழ்கினார்கள்.

அதை கண்டவுடன் விளையாண்டு கொண்டிருந்த மற்ற சிறுவர்கள் சத்தம் போட்டனர்.

 Three boys die in river

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்த விஷயம் போலீசாருக்கும், தீயணைப்புக்கும் தெரியவே ஸ்பாட்டுக்கு வந்து பள்ளத்தாக்கு தண்ணீரில் சிக்கி இறந்த மூன்று சிறுவர்கள் உடலையும் மீட்டு எடுத்தனர். இது சம்பந்தமாக கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கொடைக்கானலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death kodaikanal police school student
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe