Skip to main content

ஒரே பெண்ணை காதலித்த விவகாரம்; இளைஞரைக் கொன்று புதைத்த மூன்று சிறுவர்கள் 

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

Three boys arrested for love issue nellai

 

நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வமருதூரை சேர்ந்த தங்கதுரை  மகன் ராஜேந்திரன் (20). பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு சென்றிருக்கிறார். ஆனால் அதன்பின் ராஜேந்திரன் வீட்டிற்கு வரவில்லை. இதனைத்தொடர்ந்து அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் ராஜேந்திரனை தேடி பார்த்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். 

 

இதனிடையே  இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்தது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இந்நிலையில் அந்த 16 வயது சிறுவன், வேறு ஒருவரிடம் போலீஸ் என்னை முதலில் அழைத்தபோது ராஜேந்திரன் கொலை தொடர்பாக விசாரிக்கத்தான் என்று நினைத்தேன், ஆனால் அதற்கு இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்த தகவல் போலீசாருக்கு கிடைக்க, உடனடியாக 16 வயது சிறுவனை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் ராஜேந்திரனும், 16 வயது சிறுவனையும் ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரனை இரண்டு சிறுவர்களுடன் சேர்ந்து 16 வயது சிறுவன் கொலை செய்து அரசூர் பகுதியில் புதைந்துள்ளது தெரியவந்தது. 

 

இதனைத் தொடர்ந்து மூன்று 3 சிறுவர்களையும் கைது செய்த போலீசார், கொன்று புதைக்கப்பட்ட ராஜேந்திரனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். ஒரு பெண்ணுக்காக மூன்று சிறுவர்கள் சேர்ந்து ஒருவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.