three arrested under pocso act in dindigul

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த சிலுவத்தூர் அருகே உள்ள ஆர்.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தங்கவேல். இவர், 13 வயதான எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தனியாக வீட்டில் இருந்ததை தெரிந்துகொண்டு, அவருக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து ஏமாற்றி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Advertisment

இதனை தெரிந்துகொண்ட அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள், குருநாதன் ஆகியோரும் அந்த மாணவியை ஏமாற்றி தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி மூன்று பேரும் மாணவியைப் பலமுறை வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

Advertisment

அந்தச் சிறுமியும் உயிருக்குப் பயந்து இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சிலர் மாணவியை தங்கவேல் தனியாக அழைத்துச் செல்வதைப் பார்த்து மாணவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர் மாணவியிடம் விசாரித்தபோது, அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவர்களிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் வடமதுரை மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தென்றல், வழக்குப் பதிவுசெய்து தங்கவேல், பெருமாள், குருநாதன் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.