Skip to main content

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இரட்டைக்கொலையில் தொடர்புடைய கொள்ளையர்கள் கைது

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

சீர்காழியில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டை கொலை வழக்கில் மூன்று பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் முகமது யூனுஸ், இவரது மகள் சமீராபானு. 20 வயதான சமீரா பானுவும், அவரது பாட்டி கதீஜாபீவியும், அவரது வீட்டில் வேலைபார்க்கும் பாண்டியம்மாளும்  2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி இரவு டிவி பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது வெற்றிலை எச்சிலை துப்புவதற்கு வெளியில் வந்த பாண்டியம்மாளை பதுங்கியிருந்த மர்ம நபர்களால் தலையில் கட்டையால் தாக்கியுள்ளனர், ரத்தவெள்ளத்தில் இருந்த பாண்டியம்மாளின் அலரலைக்கேட்டு ஓடிவந்த யூனுசின் மனைவி ரபியாபீவியும், அவரது மகன் நாசரும் பாண்டியம்மாள் தவறிகீழே விழுந்துவிட்டதாக நினைத்து காரில் தூக்கிக்கொண்டு மருத்துமனைக்கு சென்றனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து, சமீராபாணுவையும், அவரது பாட்டி கதீஜாபீவியையும் படுகொலை செய்துவிட்டு சென்றுவிட்டனர். பிறகு சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
 

three arrested after 8 years


இந்த வழக்கில் சமீராபானு யாருடனாவது காதல் இருந்திருக்கலாம் அதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என காவல்துறை விவகாரத்தை மாற்றியது. அந்த பகுதிவாசிகளோ முன்பகை என கூறிவந்தனர். ஆனால் முகமதுயூனுஸ் எங்களுக்கு அப்படி தோணவில்லை உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கொடுங்கள் என மன்றாடி வந்தார். ஆனாலும் காவல்துறை அதில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தனது மகள் மற்றும் தாயை வெட்டி படுகொலை செய்தவர்களை சிபிசிஐடி போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் 2015ம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் 8 ஆண்டுகளாக இரட்டை கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் சுரேஷ் குமார் என்கிற சுரேஷ் அந்தனப்பேட்டை விஏஓ செல்வத்திடம் ஆஜராகி சீர்காழியில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவன் என கூறி செல்வத்திடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான். பிறகு நாகை சிபிசிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷ்குமார் என்கிற சுரேசை கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


சுரேஷ் குமார் கொடுத்த வாக்குமூலத்தில், "நானும் எனது நண்பர்கள் கமல், ஆனந்த் ஆகிய மூவரும் சேர்ந்து, அந்த வீட்டை நோட்டமிட்டுக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் பாண்டியம்மாளை தாக்கினோம், நாங்கள் நினைத்ததுபோலவே வீட்டில் இருந்த ராபியாபீவியும், அவரது மகன் நாசரும் பாண்டியம்மாளை மருத்துவமனைக்கு தூக்கிகொண்டு போனார்கள், பிறகு வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த சமீராபாணுவையும், அவரது பாட்டி காதீஜாபீவியையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு கொள்ளையடிக்க முயன்றபோது, வெளியாட்கள் ஓடிவரும் சத்தம் கேட்டதால் அங்கிருந்து தப்பித்து விட்டோம்." என்று கூறியுள்ளனர். மேலும், கொலையில் ஈடுபட்ட இருவரை சுரேஷ்குமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

2012ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையிலும், 2015 ஆம் ஆண்டு புதுச்சேரி கிராமபாக்கத்திலும் வீட்டில் தனியாக இருந்த இரண்டு பெண்களை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.