Skip to main content

நெடுவாசல் காக்க போராடியவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 15/05/2018 | Edited on 15/05/2018

  

j


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்ப்பன் எடுக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட மறுநாளே தொடங்கிய மக்கள் போராட்டம் காட்டுத்தீயாக பரவி தமிழகம் கடந்தும் நடந்தது. 

 

திட்டத்தை கைவிடுவோம்.. போராயவர்கள் மீது வழக்கு போடமாட்டோம், 15 ஆண்டுகளுக்கு வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கருக்காகுறிச்சி, வானக்கண்காடு, கோட்டைக்காடு கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் ஆழ்குழாய் கிணறுகளை 9 மாதங்களில் அகற்றி விவசாயிகளிடம் விவசாய நிலமாக ஒப்படைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கணேஷ் உறுதி மொழி எழுதிக் கொடுத்த நிலையில் போராட்டங்கள் கைவிடப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் கொடுத்த உறுதி மொழி எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் போராடியவர்கள் மீது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் தான் வந்தது. சம்மன் வந்த நிலையில் நெடுவாசல் போராட்டக்குழு கூடி வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அத்துடன் உங்கள் உறுதிமொழிபடி ஆழ்குழாய் கிணறுகளை அகற்றவில்லையே என்று குழுவினர் கேட்ட போது.. ஆழ்குழாய் கிணறுகளை அகற்ற அதிக செலவாகும் என்பதால் தாமதம் ஆகிறது. மேலும் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ள நில உரிமையாளர்கள் இன்னும் குத்தகை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

 

 இந்த நிலையில்.. நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடந்த ஆண்டு மார்ச் 6 ந் தேதி கீரமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேர் மீது கீரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

 இதேபோன்று, ஆலங்குடியில் 42 பேர், வடகாட்டில் 9 பேர் மற்றும் நல்லாண்டார்கொல்லையில் 4 பேர் என மொத்தம் 62 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களை வெவ்வேறு நாட்களில் ஆஜராகுமாறு ஆலங்குடி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

 இதில், கீரமங்கலத்தைச் சேர்ந்த 7 பேர் துரைப்பாண்டியன், கண்ணன், குமார், துரை, பாண்டியன், செங்கு உள்ளிட்ட 7 பேர் ஆஜராகினர். அப்போது, நீதிபதி விடுப்பில் சென்றுவிட்டதால் இவ்வழக்கு ஜூலை 24-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.இதில் பலர் வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிலர் கருப்பு சட்டை அணிந்து வந்து ஆஜரானார்கள்.

 

  இதேபோல, வடகாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட 9 பேரையும் ஆஜராகுமாறு நீதிமன்றத்தில் நேற்று அழைக்கப்பட்டது. அப்போது, சம்மன் ஏதுமின்றி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 5 பேர் ஆஜராகினர். அப்போது, தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இன்று  நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டுமென நாளிதழ்களில் செய்தி  வெளியானதைத் தொடர்ந்தும் ஆஜரானதாக விளக்கம் அளித்தனர்.

 

    சம்மன்  கொடுக்காதது தொடர்பாக வடகாடு காவல் நிலையத்தில் இருந்து ஆஜரான போலீஸாரிடம் விவரம் கேட்ட நீதிமன்ற பணியாளர்கள், மறு சம்மன் வரும்போது ஆஜராகுமாறு கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஆலங்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 42 பேரின் வழக்கு மே 30-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.