Skip to main content

இறைவனின் அற்புதங்களை வலைத்தளங்களில் பரப்பியவர்கள் கைது! -வனத்துறையினர் அதிரடி!

Published on 07/06/2020 | Edited on 08/06/2020

 

Those who spread the miracles of the Lord arrested! - Wildlife Action!


உலகத்துக்கு ஏதாவது கருத்து சொல்லியே ஆகவேண்டும் என்ற துடிப்போடு பேசி, அதனை வீடியோ பதிவு செய்து,  சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர்கள், அனேகம் பேர். நாகராஜும், மாலையனும் அந்த ரகம்தான்.
 


விருதுநகர் மாவட்டம், சதுரகிரி மலையடிவாரத்தில் இயங்கும் அம்மையப்பர் சமூக அறக்கட்டளையின் சார்பில் பேசுகிறோம் என அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், சதுரகிரி மலைக் காப்புக்காட்டில் மாலையன் நீர்க்கொடிகளை வெட்டுவதும், கொடியிலுள்ள நீரை நாகராஜ் அருந்துவதும் பதிவாகியுள்ளது. மேலும், “இறைவன் என்னென்ன அற்புதங்களை நிகழ்த்தியுள்ளான்..” என்று சிலாகித்துப் பேசி, “வனங்களைப் பாதுகாப்போம்..” என்று மக்களுக்கு அறிவுரையும் வழங்கியிருக்கின்றனர்.
 

Those who spread the miracles of the Lord arrested! - Wildlife Action!


சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவ, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா, தைலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜுவையும், மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா,  டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாலையனையும், வனத்துறையினர் தேடிப்பிடித்து கைது செய்தனர். இருவருக்கும் தலா ரூ.5,000 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பியதோடு, “அத்துமீறி காட்டிற்குள் நுழைய மாட்டோம். மூலிகைகளை வெட்ட மாட்டோம். வீடியோ எடுத்து வெளியிட மாட்டோம்.” என்று தோப்புக்கரணம் போட்டவாறே ஒப்பிக்கச் சொல்லி, அதனை வீடியோ பதிவாக்கியுள்ளது, வனத்துறை.
 


விடுவித்தபோது, ‘நல்லதுக்கு காலமில்லை..’ என்று நாகராஜ் முனகியது, நல்லவேளை.. வனத்துறையினருக்குக் கேட்கவில்லை.

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.