Skip to main content

இறைவனின் அற்புதங்களை வலைத்தளங்களில் பரப்பியவர்கள் கைது! -வனத்துறையினர் அதிரடி!

Published on 07/06/2020 | Edited on 08/06/2020

 

Those who spread the miracles of the Lord arrested! - Wildlife Action!


உலகத்துக்கு ஏதாவது கருத்து சொல்லியே ஆகவேண்டும் என்ற துடிப்போடு பேசி, அதனை வீடியோ பதிவு செய்து,  சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர்கள், அனேகம் பேர். நாகராஜும், மாலையனும் அந்த ரகம்தான்.
 


விருதுநகர் மாவட்டம், சதுரகிரி மலையடிவாரத்தில் இயங்கும் அம்மையப்பர் சமூக அறக்கட்டளையின் சார்பில் பேசுகிறோம் என அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், சதுரகிரி மலைக் காப்புக்காட்டில் மாலையன் நீர்க்கொடிகளை வெட்டுவதும், கொடியிலுள்ள நீரை நாகராஜ் அருந்துவதும் பதிவாகியுள்ளது. மேலும், “இறைவன் என்னென்ன அற்புதங்களை நிகழ்த்தியுள்ளான்..” என்று சிலாகித்துப் பேசி, “வனங்களைப் பாதுகாப்போம்..” என்று மக்களுக்கு அறிவுரையும் வழங்கியிருக்கின்றனர்.
 

Those who spread the miracles of the Lord arrested! - Wildlife Action!


சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவ, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா, தைலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜுவையும், மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா,  டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாலையனையும், வனத்துறையினர் தேடிப்பிடித்து கைது செய்தனர். இருவருக்கும் தலா ரூ.5,000 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பியதோடு, “அத்துமீறி காட்டிற்குள் நுழைய மாட்டோம். மூலிகைகளை வெட்ட மாட்டோம். வீடியோ எடுத்து வெளியிட மாட்டோம்.” என்று தோப்புக்கரணம் போட்டவாறே ஒப்பிக்கச் சொல்லி, அதனை வீடியோ பதிவாக்கியுள்ளது, வனத்துறை.
 


விடுவித்தபோது, ‘நல்லதுக்கு காலமில்லை..’ என்று நாகராஜ் முனகியது, நல்லவேளை.. வனத்துறையினருக்குக் கேட்கவில்லை.

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.