''அண்ணா பிறந்தநாளில் இந்த எதிர்பார்ப்பு இருக்கிறது''-திருமா பேட்டி!

 '' Those who have been in prison for 10 years should be released '' - thiruma Interview!

10 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருவமாவளன்தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருவமாவளன்இன்று பெரம்பலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நீட் தேர்விற்கு விலக்கு பெறுவதில்நடைமுறை சிக்கல் இருக்கிறது. அண்ணா பிறந்தநாளை ஒட்டி 10 ஆண்டுகாலம்சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும். பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும். பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் இத்தகைய அறிவிப்பு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. வரும் செப்.17 ஆம் தேதி சமூகநீதி நாளன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் உறுதிமொழி ஏற்பார்கள்'' என்றார்.

Perambalur vck thirumavalavan
இதையும் படியுங்கள்
Subscribe