Skip to main content

காட்டுக்குள் செல்பவர்களுக்குத் துப்பாக்கி வழங்க வேண்டும்...! - கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!

Published on 18/12/2020 | Edited on 19/12/2020

 

erode

 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட பேரவைக் கூட்டம், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்டாலின் சிவக்குமார் தலைமையில், கோபிசெட்டிபாளையம் மாவட்ட அலுவலகத்தில் 18/12/2020 அன்று நடைபெற்றது.

 

கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் டி.ஏ.மாதேஸ்வரன், மாவட்டத் துணைச் செயலாளர் ஜி.வெங்கடாசலம் மற்றும் தாளவாடி, சத்தி, பவானிசாகர், டி.என்.பாளையம், கோபி, நம்பியூர், பரகூர், பவானி, அந்தியூர் ஆகிய ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
 

"வனத்துறை ஊழியர்களின் பாதுகாப்பிற்குத் துப்பாக்கி வழங்க வேண்டும்!

 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பருவகால பிந்தைய வன விலங்கு கணக்கெடுப்பு 17-ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது. இக்கணக்கெடுப்பில் வனத்துறை ஊழியர்களும், தன்னார்வலர்களும் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் வன விலங்குகள் நடமாட்டத்தைப் பல்வேறு வகைகளில் கணக்கிடுவார்கள்.

 

முதல் நாளான நேற்று மாலை, சுமார் நான்கு மணியளவில், சத்தி வனக்கோட்டம், விளாமுண்டி வனச்சரகத்திற்குட்பட்ட மோயாறு ஆற்றையொட்டிய பகுதியி்ல் கணக்கெடுப்பை முடித்துத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த காட்டு யானையால் கொடூரமாகத் தாக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமுற்றுள்ளார்.

 

கோபி செட்டிபாளையத்தைச் சேர்ந்த வனக்காவலர் சதீஷ், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த தன்னார்வலர் முத்து பிரபாகர சேரபாண்டியன் ஆகிய இருவரும் கொடூரமாக யானையால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

 

மற்றொரு வனக்காவலர் பொன்.கணேசன் படுகாயமுற்று கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேட்டைத் தடுப்புக் காவலர் உள்ளிட்ட வனத்துறை ஊழியர்கள் அடர்ந்த வனப்பகுதியில், கொடூர விலங்குகளுக்கிடையில் உயிரைப் பணயம் வைத்து பணிபுரிகின்றனர்.

 

வனவிலங்கு தாக்குதலுக்குள்ளானால், அதைப்பற்றி வெளியிடத்திற்குத் தெரியப்படுத்தவோ, முதலுதவிக்குக் கூட வாய்ப்பற்ற சூழ்நிலையில் பணியாற்றுகின்றனர். கொடூர விலங்குகளுக்கிடையில் அடர்ந்த வனப்பகுதியில் உயிருக்கு எந்நேரமும் அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில் உள்ள ஊழியர்களை நிராயுதபாணிகளாகப் பணியாற்ற வைப்பது, சற்றும் மனிதாபிமானமற்றது மட்டுமல்ல நியாயமற்றதுமாகும்.

 

cnc

 

ஆகவே, வேட்டைத் தடுப்புக் காவலர்கள் உள்ளிட்ட அனைத்து வன ஊழியர்களுக்கும் தற்காப்பிற்காக, துப்பாக்கி வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. அதேபோல் ஐந்தாண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்த வேட்டை தடுப்புக் காவலர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். உயிரிழந்த வனப்பணியாளர் மற்றும் தன்னார்வலர் குடும்பத்திற்குத் தலா 25 லட்சம் ரூபாயை அரசு நிவாரணமாக வழங்குவதோடு இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.